பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
53



ராசேந்திரன்பால் பிறந்த வீரத்திருமகனும், பிற்காலத்தில் தன் இருகுலமும் ஒரு குலமாய் உயர்ந்தோங்க உலகாண்ட உரவோனுமாகிய குலோத்துங்கனுக்கு, மகள் மதுராந்தகியை மணம் முடித்து மனம் நிறை மகிழ்வெய்தினான்.

வீரராசேந்திரன். மக்கட் செல்வத்தால் மாண்புற்ற மன்னன், கங்கைகொண்ட சோழன் ஈன்ற கான் முளை களுள், வீரராசேந்திரனும் ஒருவன். ஆவணித் திங்கள், ஆயிலியத்திருநாளில் பிறந்த இவன், அண்ணன் இரண்டாம் இராசேந்திரன் காலத்திலேயே இளவரசுப் பட்டம்பெற்று விளங்கினான், வீரமே துணையாகவும், தியாகமே அணியாகவும் வாழ்ந்த வீரராசேந்திரன், தன் பெயருக்கேற்ப, பேராற்றல் படைத்த பெருவீரனாகவே விளங்கினான். இவன் வாழ்நாள் முழுவதும்; வட வெல்லைப்வ போர்களிலேயே கழிந்து விட்டது.

வடவெல்லையைக் காப்பதில், இவன், தன் தமையன் மார் இருவரினும் பெருவிழிப்புடையவனாய் வாழ்ந்தான்; அதனால் வடவெல்லை வாழ்வோராகிய மேலைச் சாளுக்கியரோடு வாழ்நாளெல்லாம் ஒயாப் போர் மேற் கொண்டிருந்தான்; அவர்களை ஐந்துமுறை வெற்றிக் கொண்டு, ஆங்கு அழிக்கலாகா ஆட்சியை நிலைநாட்ட ஆசைகொண்ட தன் அண்ணன் மார் இருவர் கனவுகளையும் நினைவாக்கினான். வெங்களத்து ஆகவமல்லனை ஜம்படி வெந்கண்டு, வேங்கை நாடு மீட்டுக்கொண்டு. தன்னுடன் பிறந்த முன்னவர் விரதம்முடித்தான்” என அவன் மெய்க்கீர்த்தி அவனைப் பாராட்டுவது அறிக.

வீரராசேந்திரன், சோணாட்டு மன்னனாய் மணிமுடி புனைந்த மகிழ்ச்சியில், வடவெல்லைக் காவலைச் சிறிதே மறந்திருக்கும் காலம் நோக்கி, ஆகவமல்லனின் இளைய மகன் விக்கிரமாதித்தன், சோழர் ஆணைக்கு அடங்கிய கங்கபாடியைக் கைப்பற்ற திட்டமிட்டான். அஃதறிந்த வீரராசேந்திரன், அக்கணமே அமர்மேற்கொண்டு சென்று, ஆகவமல்லன் மகனையும், அவன் படைத்தலைவர்