பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
54



அனைவரையும் வென்று, துங்கபத்திரை யாற்றிற்கு அப்பால் துரத்தினான்.

சோழர்களோடு மூன்று தலைமுறைகளாகப் போரிட் டும் அவர்களை முறியடிக்க முடியாமையைக் கண்டு குந்தள நாட்டுக் காவலன் ஆகவமல்லன், வடவெல்லைப் போர்களில், வெற்றி சோழர் பக்கமே நிற்பதற்கு யாது காரணம் என்பதை எண்ணிப் பார்த்தான். சோணாட்டின் வடவெல்லையில் சோழரோடு பகைகொண்டு வாழ்வார் ஒருவரும் இலர்; அதுமட்டு மன்று, அவர்க்கு உற்ற துணை புரியும் அரசொன்றையும் ஆங்கு அவர்கள் அமைத்திருக்கின்றனர்; தன்னோடு தாயமுறையினராகிய கீழைச்சாளுக்கியர், தனக்குத் துணைபுரியாது, சோழர்க்கே துணைபுரிகின்றனர்; வடவெல்லையில் படைத் துணை அளிக்கும் ஒரு பேரரசைப் பெற்றுள்ளமையினாலேயே சோழர்களுக்கு வடபுலப் போர்களில், வெற்றி எளிதில் வாய்த்து விடுகிறது என்ற உண்மையை உணர்ந்தான் ஆகவமல்லன். உடனே, வீரராசேந்திரனை வெற்றி கொள்வதன் முன்னர், அவன் படை பலத்தைக் குறைத்துத் தன் படைபலத்தைப் பெருக்கிக் கொள்ளும் வகையில், கீழைச் சாளுக்கிய நாடாகிய வேங்கி நாட்டுத் துணையை அடைவதற்கான ஆக்க வேலைகளில் ஆகவமல்லன் சிந்தை சென்றது. அதற்கேற்ற சூழ்நிலையும், வேங்கி நாட்டில் அப்போது உருப் பெற்றிருந்தது. அக்காலை, அந்நாட்டு அரியணையில் அமர்ந்திருந்த வீரராசேந்திரன் உடன் பிறந்தாள் அம் மங்கை தேவியாரின் கணவனாகிய இராசராசநரேந்திரன் இறந்து விட்டான். சோழர்களோடு மண உறவுகொண்ட மன்னர் வழிவந்த அம்மன்னன் மறைவே, அவர்க்கும், சோழர்க்கும் இடையே ஏற்பட்டிருந்த நட்புறவின் மறைவாதல் வேண்டும் என மனத்துக்கொண்ட ஆகவமல்லன், உடனே, தன் தண்டத் தலைவன் ஒருவனைப் பெரும் படையோடு, வேங்கி நாட்டின் மீது ஏவினான். அதை அறிந்தான் வீர ராசேந்திரன், தன் பாட்டனும், தங்கள்