பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
83



மூத்தமகன் விக்கிரமசோழன்பால் ஒப்படைத்து, அவனை ஆங்கு அனுப்பியிருந்தான். வேங்கிநாட்டு வெண் கொற்றக்குடைக்கீழ் வீற்றிருப்பவன் கொற்றம் மிக்க குலோத்துங்கன் அல்லன்: விளையாடற் பருவத்தனாகிய விக்கிரமனே என்ற அறியாமை உணர்வால் அறிவிழந்து போனான். வேங்கி நாட்டின் அண்மை நாடாகிய தென் கலிங்க நாட்டுக் காவலன் வீமன், அன்று வரை வேங்கி நாட்டு வேந்தர் க்கு அடங்கிய சிற்றரசனாய் வாழ்ந்திருந்தவன் அவ்வீமன், அவனை அறியாமை இருள் சூழ்ந்து கொள்ளவே, தனியரசு அமைத்துக் கொள்ள ஆசை கொண்டு தன் நாட்டில் ஆரவாரம் செய்யத் தலைப் பட்டான்; அஃதறிந்தான் வேங்கிநாட்டு வேந்தன் விக்கிரமசோழன். உடனே பெரும் படையோடு தென் கலிங்கம் புகுந்து போரிட்டு, வீமனை வென்று பண்டே போல் தனக்குப் பணிந்து ஒழுகும் சிற்றரசாய்ப் பணி கொண்டு மீண்டான். மகன் பெற்ற இவ்வெற்றி தந்தை பெற்ற வெற்றியே ஆதலின், தென்கலிங்க வெற்றியைக் குலோத்துங்கன் வெற்றியாகவே மதித்தார்கள் மக்கள்.

வடகலிங்க வெற்றி : சோழர் பேரரசின் உள் நாடுகளுள் ஒன்றாகிய தொண்டை நாட்டின் தலைநகர் காஞ்சி, பல்லவர் காலத்திற்கும் முற்பட்ட காலத்தில் லிருந்தே, வடவெல்லைத் தலைநகராக விளங்கிய அந், நகரைக் குலோத்துங்கனும், தன் தலைநகர்களுள் ஒன்றாகக் கருதி, வாழ்நாளின் ஒரு பகுதியை அந்நகரிலும் கழிக்கத் திருவுளங்கொண்டு, அவ்வப்போது அந்நகர் வந்து தங்கிச் செல்வான். அவ்வாறு ஒரு முறை ஆங்குச் சென்றிருந்த குலோத்துங்கன் ஒரு நாள், அமைச்சர், அவைக்களப் புலவர், அரசர்குல ஆசிரியர், பெரும் படைத் தலைவர் பலரோடும் பேரவையில் வீற்றிருந்தான்: அரசவைக்கு அணிகலன்களாகிய ஆடலும், பாடலும், வாழ்த்தும், வணக்கமும் முடிவுற்ற பின்னர், திருமந்திர ஒலைநாயகன் கோமகன் திருமுன் வந்து சோழர்