இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நல்வாழ்விலே நாட்டம் செலுத்தி, நல்ல பல அரசியல் செப்பங்களை ஆக்கியவர்.
இவ்வாறு அவ்விருவரிடையேயும் இத்தகைய ஒருமைப் பாடுகள் சில உளவாதல் கண்டு, அவ்விருவரையும் ஒருங்கு காண விழைந்தேன். கண்டேன். அடியேன் கண்டதை உங்களுக்கும் காட்ட முனைந்தேன். அதன் பயனே "கலிங்கம் கண்ட காவலர்" என்ற இச்சிறு நூல்.