பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** 120, கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

என்பதைத் தங்கள் முத்துமாலைகளை அறுத்துச் சிதறுகின்ற செயலிலிருந்து அறிய முடிகிறது. குழந்தை உள்ளம் என்றால் அது ஒரு தூய்மைக்கோயிலேதான் ஆகும். அதன் உணர்ச்சிக ளெல்லாம் உண்மைக்கு மாறுபடாதவைகள். அந்த உள்ளம் நம்பிக்கை மிகுந்த உள்ளமாகத் திகழக் காண்கிறோம். தான் நம்புகிற தன் அன்னைக்குக் கடலையும் ஒருகை பார்க்கும் ஆற்றலுண்டு என்று அந்த உள்ளம் எண்ணுகிறது. அதில்தான் எத்துணை ஆழமான மனோபாவம் அமைந்திருக்கிறது.