懿夺 கலியன் குரல் கின்றது. இனி புதிய சில இலக்கிய உத்தி முறைகளைக் காண் டோம், தடம்பொங்கத்தம் பொங்கோ: இராமபிரானது வெற்றியைத் தோற்ற இளக்கதர்கள் வாயிலே வைத்துப் பேசுவது. இப்படித் தம் வாயாலே பேசுவது தகுமா என்பதை ஆராயாமலேயே ஏதேனும் ஒருபடியாலே (முறையாலே) பெருமாளுடைய வெற்றியைப் பேசு கிறார்கள் என்னும் இவ்வளவே கொண்டு உகந்து அவர்களின் நிலைமையைத் தாம் ஏறிட்டுக் கொண்டு ஆழ்வாரே பேசுகின்றார். ஒவ்வொரு பாசுரமும் தடம்பெ ங்கத்தம் பொங்கோ என்று முடி கின்றது. இத்தொடர்மொழி இந்த ஆழ்வாரின் அருளிச்செயல் தவிர வேறு எவ்விடத்தும் பிரயோகிக்கப்பட்டிருப்பதாகப் புலப்பட வில்லை தோற்றவர்கள் தோல் வியாலே படையடிக்க ஆடுவ தொரு கூத்துண்டு; அந்த சப்தா நுகாரம்?’ என்றிவ்வளவே பெரியவாச்சான் பிள்ளையும் அருளிச் செய்துள்ளார். இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்றுக் காணிர்; பகக் கயாம் இன்று உரைத்து என்? இராவணன் பட்டனன்; இனி யாவர்க்கு உரைக்கோம்? குரக்கு நாயகர் காள் இளங் கோவே! கோல வல்வில் இராம பிரானே! அரக்கர் ஆட அழைப்பா ரில்லை நாங்கள் அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ வாணர வீரர்களையும் இளையபெருமாளையும் இராமபிரா னையும் விளித்து இலங்கையரக்கர்கள் தங்கள் தோல்வியும் இவர்களின் வெற்றியும் தோற்றச் சொல்லிக் கூத்தாடுகின்றனர். அரக்கர் ஆட அழைப்பாரில்லை: இத்தொடருக்கு நஞ்சியர் நம் பிள்ளைக்கு 'இராக்கதரில் இனி ஆடுபோலக் கூப்பிடக் 77. பெரி. திரு. 10, 2: 1
பக்கம்:கலியன் குரல்.pdf/107
தோற்றம்