பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

1. உலக வரை படத்தை முதன் முதல் வரைந்தவர்!

கிரேக்க நாட்டின் அறிஞர்களில் ஒருவரான இராடோஸ்தனீஸ் என்பவர்தான், உலகத்தின் வரைபடத்தை முதன் முதலில் வரைந்தவர்.

இவர் கி.மு. 200-ம் ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்து நாட்டிலுள்ள அலெக்சாண்டிரியா என்ற நகரில் வாழ்ந்தவர்.

உலக வடிவம் என்பது ஆழ்கடல் சூழ்ந்த ஆடக்கமான, இன்பமயமான ஒரு தீவு என்று அவர் கற்பனை செய்து, அவ்வாறே அந்தப் படத்தை வரைந்தார்.

அல் வரைந்த உலக உருவப் படத்துடன், தற்போது வரையப்பட்டுள்ள படத்தையும் பார்க்கும் போது, அவரது கற்பனை அதிகம் தவறு என்று கூறமுடியாது

அதே நேரத்தில் இந்தியாவில் வாழ்ந்த சில அறிஞர்கள் கற்பனை செய்த உலகத்தின் வடிவத்தை விட, அவர் கற்பனை செய்த வரைபட உண்மையைப் பார்த்தால், இது ஒருபடி முன் செல்வதாகவே இருந்தது.

இந்திய ஞானிகள் கற்பனையில், மிகப் பெரிய ராட்சத ஆமை ஒன்று கரையில்லாத கடலில் நீத்திக் கொண்டு இருந்தது.

கவா-1