பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

கலீலியோவின்


உலக வடிவத்தின் தத்துவ உண்மைகளுக்கு உகந்தவாறு வாழ்ந்து காட்டிய முதல் மகாமேதைகள், மூவரில் சர்ஐசக் நியூட்டனும் ஒருவராகத் திகழ்ந்தார்! அவரை உலகம் முதலாவது நவீன கால மனிதன் என்று பாராட்டிப் போற்றியது.

மேதைகள் கோப்பர்நிக்கசுக்கும் சர்ஐசக் நியூட்டனுக்கும் இடைக் காலத்திலே வாழ்ந்த கலீலியோ கலீலி என்ற மாமனிதன் தூரதரிசினி என்ற பார்வைக் குழாயைக் அவருக்குப் பின் வாழ்ந்து மறைந்த எண்ணற்ற விஞ்ஞானிகள் கலீலியோ கருவிகனைப் பயன்படுத்திப் பற்றபல விஞ்ஞானப் புதுமைகளைச் செய்து காட்டியுள்ளார்கள்.

அந்த தூரதரிசினி மட்டும் இல்லாவிட்டால் கீழ்க்கண்ட புதுமைக் கருவிகள் தோன்றியிரா என்பது விஞ்ஞானத்துறை நூற்றுக்கு நூறு தலைவணங்கி ஏற்கவேண்டிய அற்புதமாகும். அதன் விவரம் இதோ படியுங்கள்.

20. கலீலியோ டெலஸ்கோப் புதுமைக் கண்டுபிடிப்புகள்

★ இங்கிலாந்தில் ஜோசப் பிரீஸ்டிலி தோன்றி பிராண வாயுவைக் கண்டு பிடித்தார். இந்த உயிர்க்காற்று எவ்வளவு அவசியம் மனிதனுக்கு என்பதை விளக்கவா வேண்டும்.

★ பிரஞ்சு மேதை அந்தோணி லாவஸ்யர் நவீன ரசாயனத்தின் வகைகளுக்குத் தந்தை என்று போற்றப்படுவதற்கு அவரது கண்டுபிடிப்புகளே காரணம்!

★ இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் டால்டன், அணு சக்தி தத்துவத்தைத் தோற்றுவித்து, அதற்குரிய கருவிகளைத் தயாரித்தார். அணுவே, ஒரு பொருளின் மிகச்சிறிய துகள் என்று அவர் கண்டார்.