பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

கலீலியோவின்


★ க்ஷயரோகம் அல்லது காசநோய்க் கிருமிகளை, ஜெர்மனி நாட்டு வித்தகர் ராபர்ட் தோசி என்பவர் அவற்றை நோயிலே இருந்து தனியாகப் பிரித்தெடுக்கும் வழியைக் கண்டு பிடித்தார்!

★ இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்,நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுகின்றன என்ற புதிய விதியை ரஷ்சிய விஞ்ஞானியான எல்லி மெஷ்னிகாப் என்றவர் கண்டறிந்துக் கூறினார்.

★ ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வில்லியம் ரோண்ட்ஜன், எக்ஸ்ரே என்ற விஞ்ஞானக் கருவியைக் கண்டு பிடித்து உலக சுகாதார இயக்கம் பரவ வழிகாட்டினார்.

★ மஞ்சள் காமாலை நோயை ஒழிக்க, பல பரிசோதனைகளை நடத்தியவர் வால்டர் ரீம் என்ற அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி!

★ இங்கிலாந்து நாட்டுக்காரரான அலெக்சாண்டர் பிளம்மங் பென்சிலின் என்ற ஊசிக்குரிய மருந்தைக் கண்டு பிடித்தார். இந்த மருந்து எண்ணற்ற மக்களைக் காக்கும் நோய்த் தடுப்பு ஊசியாக இன்றும் உள்ளது.

★ நீரிழிவு என்ற நோய்க்கு ஏற்ற இன்சுலின் எனற மருந்தைக் கனடா நாட்டைச் சேர்ந்த பிரடிரிக் காண்டிங் என்பவர் கண்டு பிடித்தார்!

★ ஜோனஸ் சால்க என்ற அமெரிக்க மருத்துவ ஞானி, இனம்பிள்ளை வாதம் என்ற நோயைத் தடுக்கும் ஊசி மருத்தைக் கண்டு பிடித்தார்.

★ கம்பியின் வழியாகத்தான் மின்சாரம் பாயும் என்ற விதியை, இத்தாலி நாட்டினரான லூசி சால்வனி என்பவர் கண்டறிந்துக் கூறினார்!