பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரிசி

192

அரிசி

ராத்தலாகும். பீகார் முதலிய மற்ற இசாச்சியங்களில் ஏறக்குறைய 800 ராத்தலாகும். (1948 -51 புள்ளிகள்).

இந்திய மக்களுக்கு ஆண்டுதோறும் இரண்டரைக் கோடி டன் அரிசி தேவை. ஆனால் விளைவது இதில் ஏறக்குறைய 90% தான். எஞ்சிய 10% பிற நாடுகளிலிருந்து வரவேண்டும். ஆனால் முன்போல் இப்போது பர்மாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கில்லை. அதனால் இந்தியா நெற்பயிர் விளைவு விகிதத்தைப் பெருக்குவது இன்றியமையாது வேண்டப்படுவதாகும்.

நெற்பயிர் செய்யும் வகைகள்: நெற்பயிரானது நன்செய்ப் பயிர், புன்செய்ப் பயிர் என இருவகைப்படும். புன்செய்ப் பயிராக விதைத்தபோதிலும் பின்னர் மழை மிகுதியாகப் பெய்தபின் நன்செய்ப் பயிராக ஆவதுமுண்டு. நெற்பயிர்க் காலம் முழுவதிலும் போதுமான நீர் கிடைக்கும் தாழ்ந்த பூமிகளில் விளைவது நன்செய்ப் பயிர். இந்தப் பயிருக்கு 140-170 நாட்களில் விளையும் நெல் வகைகளை விதைப்பர். புன்செய்ப் பயிர் எப்போதும் மழை நீர் கொண்டே விளையவேண்டியது. அதற்கு 90-120 நாளில் விளையும் நெல் வகைகளை விதைப்பர். நன்செய்ப் பயிர் நீர்வளம் பெறுவதால், புன்செய்ப் பயிரிலும் மிகுதியாக விளைவு தரும்.

நெல் விளையும் பகுதிகளில் அதை ஆண்டு முழுவதும் விதைத்தாலும், பெரும்பாலான இடங்களில் விதைப்பதற்கு மூன்று பருவங்களே ஏற்றவை. 'சம்பா' என்று தென்னாட்டிலும்,'ஆமன்' என்று வடநாட்டிலும் சொல்வது, ஜூன் ஜூலையில் விதைத்து நவம்பர் டிசம்பரில் அறுவடையாகும். கார், குறுவை என்று தமிழ்நாட்டிலும், ஆவுஸ், பியாலி என்று வடநாட்டிலும் சொல்வது மே ஜூனில் விதைத்துச் செப்டம்பர்- அக்டோபரில் அறுவடையாகும். பிசானம், நவரை என்று தமிழ்நாட்டிலும், போரோ, தாளுவா என்று வடநாட்டிலும் சொல்வது நவம்பர் டிசம்பரில் விதைத்து, மார்ச்சு ஏப்ரலில் அறுவடையாகும்.

சம்பாப் பயிரை நாற்றுவிட்டு நடுவார்கள்; கார் காலத்தில் 90-110 நாளில் விளையும் நெல் வகைகளை விதைப்பர். இந்த இரண்டு வகை நெல்லும் விளையும் பகுதிகள் சிலவே.

பயிர்செய் முறைகள்: நெல்லுக்கு மிகுந்த நீரும் ஈரமான தட்பவெப்ப நிலையும் வேண்டும். சம்பாப் பயிரைத் தென்மேற்குப் பருவமழை தொடங்கினதும் குளிர்ந்த பகுதிகளில் விதைக்கவும், மழை மிகுந்த இடங்களில் நடவும் செய்வர். நடவு நட்டுப் பயிர் செய்வதே விதைத்துப் பயிர் செய்வதைவிட மிகுந்த விளைவு தரும். விரைவில் விளையும் வகைகளை விதைப்பர். நீண்ட நாள் சென்று விளையும் வகைகளை நடுவர். விதைப்பதானால் ஏக்கருக்கு 80-100 ராத்தலும், நடுவதானால் ஏக்கருக்கு 30-40 ராத்தலும் வித்துத் தேவையாகும்.

நாற்றங்கால்: விதைப்பதற்குமுன் நிலத்தில் சாணமும் தழையுமாக உரமிட்டுப் பண்படுத்தி, ஏக்கருக்கு 400-500 ராத்தல் வித்தை நெருக்கமாக விதைப்பர். உண்டாகும் நாற்றை 13-15 ஏக்கர் நிலத்தில் நடலாம். முப்பது நாளிலிருந்து ஐம்பது நாள் வரைக்கும், நெல்வகையின் வயதைப் பொறுத்து நாற்றைப் பிடுங்கி நடுவர். சில பகுதிகளில் நெல்லை ஒருநாள் ஊறவைத்து அதன்பின் விதைத்து நீர் பாய்ச்சுவர். இந்த முறையை மழை பெய்யக்கூடிய இடங்களிலும் பாசன வசதிகள் உள்ள இடங்களிலும் மட்டுமே கையாளலாம்.

நிலத்தைப் பண்படுத்தல்: நிலத்தில் வரப்பை உயரமாக்கி, நீர் பாய்ச்சிப் பன்முறை உழுது சேறாக்கி, நாற்றை இரண்டு மூன்றாகச் சேர்த்து 6-9 அங்குல தூரத்தில் நடுவர். நீர் எப்போதும் நிலத்தில் நின்று கொண்டிருக்கவேண்டும். இடையிடையே பழைய நீரை வடித்துவிட்டுப் புது நீரைப் பாய்ச்சுவர். நட்டது முதல் அறுக்கும்வரை 60-70 அங்குல மழை தேவை யாகும்.

களை எடுத்தல்: விதைத்துப் பயிராகும் பூமியில் களை மிகுந்து தோன்றும். இரண்டு மூன்று தடவை களை எடுப்பர். சில பகுதிகளில் விதைத்து இரண்டு மாதமானதும் 2-3 அங்குல நீர் நிற்கும்போது சிறு கலப்பை கொண்டு உழுவர்; பெண்கள் ஏரின்பின் சென்று நாற்றைச் சீர் செய்வர். இந்த முறையில் களையும் நீங்கும்; பயிரும் நெருக்கம் குறையும்.

அறுவடை: கதிர் முதிர்ந்ததும் தாள் பழுத்துச் சிறிதே பசுமையாயுள்ள வேளையில் அறுவடை யாகும். அறுத்த கதிர்கள் இரண்டு மூன்று நாள் வயலில் கிடந்து உலர்ந்தபின் எடுத்துக் கொண்டுபோய்ச் சூடடிப்பர். சில பகுதிகளில் காளைகளைக் கொண்டு சூடடிப்பர். சில பகுதிகளில் தாள்களைத் தரையிலோ பலகையிலோ அடிப்பர்.

அரிசியைச் சேமித்தல் : சூடடித்துத் தூய்மை செய்தபின் நெல்லை உலர்த்தி, மண், வைக்கோல், மூங்கில்பத்தை, பருத்திவளார், சோளத்தட்டை முதலியவற்றால் செய்த குதிர்களில் சேமித்து வைப்பர். ஈரத்துடன் சேமித்தால் நெல்லில் பூச்சி விழும். பூஞ்சாணம் பிடிக்கும். சிறிது காலம் சேமித்த பின்னரே உண்ணலாம். சேமித்த நெல்லில் சில மாறுதல்கள் ஏற்படுகின்றன. அந்த அரிசியே வேகும்போது மிகுந்த நீர் ஏற்று, மிகுந்த நேரம் வெந்து குழையாமலும், விரைவில் உலர்ந்து கட்டியாகாமலும் இருக்கும்.

சிறந்த நெல் வகைகள் : இந்தியாவில் சராசரி விளைவு குறைவாதலால் மிகுந்த விளைவு தரக்கூடிய நெல் வகைகள் உண்டாக்குவதற்கு ஆராய்ச்சிகள் நடைபெற்றதன் பயனாக 284 புது வகைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நீர்மிகுதி, நீர்வறட்சி, நோய், பூச்சி ஆகியவற்றை எதிர்க்கக் கூடிய ஆற்றலுடையனவாயும் மிகுந்த விளைவும் ஊட்டமும் தருவனவாயுமுள்ள வகைகளை உண்டாக்க முயன்று வருகின்றனர்.

உரமிடல்: இந்தப் புது வகைகளும் உரம் நிறைய இட்டாலே மிகுந்த விளைவு தரும். 3000 ராத்தல் அரிசியும் 3000 ராத்தல் வைக்கோலும் தரும் நிலம் 48 ராத்தல் நைட்ரஜனையும், 23 ராத்தல் பாஸ்பாரிக அமிலத்தையும், 41 ராத்தல் பொட்டாஷையும் பயன் படுத்திக் கொள்கிறது. இந்தியாவிலுள்ள நிலங்களில் பொட்டாஷ் குறைவில்லை. நைட்ரஜன் மிகவும் குறைவு.

தேவையான நைட்ரஜனின் அளவு, கரிம உரங்கள், கரியற்ற உரங்கள் ஆகியவற்றின் தராதரங்கள், உரமிட வேண்டிய காலமும் முறையும், அம்மோனியம் சல்பேட்டு இடைவிடாது போடுவதால் நிலம் பெறும் வளத்தின் அளவு ஆகியவற்றைக் குறித்து ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. நட்டு ஒரு திங்கள் ஆனபின் 100-200 ராத்தல் அம்மோனியம் சல்பேட்டைப்போட்டால், ஏக்கருக்கு 300-500 ராத்தல் நெல் கூடுதலாகக் கிடைக்கும். கரிம உரங்களையும் கரியற்ற உரங்களையும் தக்க வண்ணம் போட்டால் நிலத்தின் வளம் கெடாமலே மிகுந்த விளைவைப் பெறலாம்.

செம்பைச் செடியையாவது சணற் செடியையாவது பயிராக்கி, நாற்று நடுமுன் உழுது புதைத்துவிட்டால், இதுவே மிகவும் குறைந்த செலவில் நல்ல பயன் தரும் உரமாகும். இந்த முறை விரைவாகப் பரவிவருகிறது.

இரண்டு முறைப் பயிர்: பொதுவாக ஒரு முறை விளைவு எடுத்ததும் பூமியைத் தரிசாகப் போட்டுவிடுவது வழக்கம். சில பகுதிகளில் நெல் அறுவடை செய்தபின்