பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழகியல்

239

அழகியல் உளவியல்

அறிவும் உணர்ச்சியும் உடையவர் எல்லோர்க்கும் அது அழகாகவே தோன்றும் என்னும் உறுதியேயாகும். அந்தச் சமயத்தில் பிறர் அழகுடையதாக ஒத்துக் கொள்ளுவார்களோ என்ற ஐயம் எழுவதில்லை. எல்லோர்க்கும் அழகாகவே தோன்றும் என்ற உறுதியே சில நிமிடங்களேனும் காணப்படும். இரண்டாவதாக, அழகுள்ள பொருளைப் பார்க்கும்பொழுது இது உண்மையான பொருளா அல்லது கற்பனையில் எழுந்த பொருளா என்ற எண்ணமும் தோன்றுவதில்லை. கொடியில் பூத்த மலரா அல்லது கற்பனை செய்த மலரா என்ற கேள்வியில் நாம் அக்கறை கொள்வதில்லை. மூன்றாவதாக, இந்த அழகுடைய பொருளை எவ்விதமேனும் உபயோகிக்க இயலுமா என்னும் கேள்வியும் எழுவதில்லை. வாளின் கைப்பிடியில் செதுக்கயுள்ள வேலைப்பாடுகளைக் கண்டு மகழும் பொழுது அதன் உபயோகத்தையோ, வேறு தன் மைகளையோ ஆராய்வதில்லை. ஆராயப் புகுந்தால் அப்பொழுது அழகை நுகரும் மனோபாவம் அகன்று போகும். இந்த மூன்று தன்மைகளும் ஒருங்கே உள்ள மனோநிலையானது அழகைக் கண்டு மகிழும் பொழுதுதான் உண்டாகும். அதை உண்டுபண்ணுவது தான் அழகின் ஆற்றல்.

இந்திய ஆராய்ச்சி : பண்டை இந்திய அறிஞர் அழகின் தத்துவத்தைத் தெளிவாக அறிந்திருந்தனர். அழகின் தன்மை இது என்று அலங்கார சாஸ்திரங்கள் மூலம் இலக்கணமுறையிம், நாடகம், நாட்டியம், காவியம் மூலம் இலக்கியமுறையிலும் தெளிவாக விளக்கியிருக்கின்றனர். நாடகத்தை எழுதுபவன் கலைஞன். அதைப் பார்த்து அதன் அழகில் ஈடுபட்டு அனுபவிப்பவன் ரசிகன். அவன் மனத்தில் தோன்றும் பாவங்களும் ரசங்களும் அவனை மகிழும்படி செய்துவிடுகின்றன. அந்த அனுபவத்தை ஆராய்வதே அலங்கார சாஸ்திரங்களின் நோக்கம்.

முக்கியப் பாவரசங்கள் எட்டு அல்லது ஒன்பது என்று பரதரும் பெரும்பாலான நாட்டியச் சாஸ்திர நூல்களும், பத்து என்று பின் எழுந்த சில நூல்களும் கூறுகின்றன. கலைஞன் இந்த ரசங்களை அளிக்கும் நிகழ்ச்சிகளையும் கதா பாத்திரங்களையும் பொறுக்கி அமைக்கின்றான். அதைக் காணும் ரசிகன் அதற்கேற்ற அறிவும், உணர்ச்சியும், மனோபாவமும் உள்ளவனாக இருப்பான். ரசிகன் உள்ளத்தில் சில நிலைத்த உணர்ச்சிகள் (ஸ்தாயிபாவங்கள்) அமைந்திருக்கும்; இதன் காரணமாக ரசிகனுடைய உள்ளத்தில் கதையைப் படிப்பதாலோ, நாடகத்தைப் பார்ப்பதாலோ தூண்டப்பட்டு, உணர்ச்சிப் பெருக்கெடுத்து மகிழ்ச்சி பொங்குகின்றது. பலவிதமான உணர்ச்சிகள் பலவிதமான ரசங்களை உண்டுபண்ணும். இவற்றை அனுபவிப்பதே ரசிகனுடைய தன்மை. அழகு தருகின்ற மகிழ்ச்சியானது மற்றப் பொருள்கள் தருகின்ற மகிழ்ச்சியைப் போன்றதன்று. அது விவரிக்க வொண்ணாத ஒருவித மகிழ்ச்சி என்று கூறுவர். இதனாலேயே ரசிகன் மனோநிலை யோகியின் மனோநிலையை ஒத்ததாகக் கருதுவர். அழகு தருகின்ற மகிழ்ச்சி யானது முத்தி நிலையில் அடையும் மகிழ்ச்சியை ஒத்தது என்று அலங்கார சாஸ்திரங்கள் கூறுகின்றன. அழகிலிருந்து மகிழ்ச்சியேயல்லாது வருத்தமோ, பயமோ, வேதனையோ எவ்வுணர்ச்சியும் எழாது.

இந்த மனோநிலை நமக்கு ஒரு நிறைவு உணர்ச்சியை அளிக்கிறது. இதன் பயனாகவே ரசிகன் மகிழ்கின்றான், பரவசமடைகின்றான். இதுவே அழகின் தத்துவம். அழகிற்கு இந்தச் சக்தி எங்கிருந்து வந்தது? இதற்கு விடை கூற இயலாது. ஆனால் இந்தச் சக்தி இருப்பதினாலேயே ஒரு பொருள் அழகுள்ளதாக ஆகிறது. இது இயற்கை அழகிற்கும் செயற்கை அழகிற்கும் பொருந்தும். அழகின் தன்மை இரண்டிலும் ஒன்றே. கலைப் பொருள் இயற்கைப் பொருள்போல் இருந்தாலும் அல்லது வெறும் கற்பனைப் பொருளாகவே இருந்தாலும் அழகின் அடிப்படையான தன்மை மாறுவதில்லை.

மக்கள் ஆதிமுதல் அழகை நுகர்ந்து மகிழ்ந்து வந்ததோடு அழகையே கடவுளாகப் போற்றியும், கடவுள் தத்துவத்துக்கும் அழகுக்குமுள்ள சம்பந்தம் பற்றி ஆராய்ந்தும் வந்தனர். அவ்விதம் ஆராய்ந்த மேனாட்டுத் தத்துவ சாஸ்திரிகளில் முக்கியமானவர் பிளாட்டினஸ் என்னும் கிரேக்க அறிஞராவர். உண்மை, நன்மை, அழகு என்னும் மூன்றுமே வாழ்வின் அற நிலைகள் என்றும், அவை மூன்றும் பூரணமாக நிரம்பிய ஒன்றே பரம்பொருள் என்றும், ஆன்மா, அறமும் அழகும் பெறும் பொழுது கடவுள் தன்மை அடைகின்றது என்றும் அவர் கூறுகின்றார். கடவுளைக் காணாதவன் அதை நன்மையாக எண்ணி, அதை அடைய விரும்புவான். கடவுளைக் கண்டவன் அதை அழகாக எண்ணிப் போற்றுவான். அதுவே ஆன்மாக்களின் உன்னதக் குறிக்கோள். அதை அடைய வேண்டுமானால் உலக போகங்களில் மனத்தைச் செலுத்தாமல் உன்னதச் செயல்களில் ஈடுபட்டுப் பேரழகாகிய கடவுளைக் காணக் கூடிய அளவு ஆன்மா தன்னை அழகுடையதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பது அவருடைய கருத்து.

வேதத்தின் சாரமாகிய உபநிடதங்களும், கடவுளைப் பூரணம் அதாவது சத்-சித்-ஆனந்தத்தின் நிறைவு என்று கூறுகின்றன. விகாரங்கள் நிறைவுக்கு விரோதமாதலால் ஆனந்தம் அழகினாலேயே உண்டாவது என்று அறிஞர்கள் உரை கூறுவர். உலகத்தில் அழகுடையனவாக இருப்பவை அனைத்தும் ஈசுவரனுடைய அமிசமே. சத்தியம், சிவம், சுந்தரம் (உண்மை நன்மை , அழகு) நிறைந்தவர் கடவுள் என்பது ஆகம புராணங்களின் கருத்து. இது பிளாட்டினஸ் கருத்துடன் ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது.

பழந் தமிழரும் கடவுளை அழகுப் பொருளாகவே கொண்டு வழிபட்டு வந்தனர். அவர்கள் அவ்வழகுப் பொருளுக்குக் கொடுத்த பெயர் முருகு-முருகன் என்பது. இம்முருகன் வழிபாடு தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே தமிழ் நாட்டில் வழக்கிலிருந்தது என்பர் அறிஞர். இவ்வழகைக் 'கைபுனைந்து இயற்றாக் கவின்பெரு வனப்பு' என்று நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் கூறுவர்.

தமிழ் பிறந்த இடமும், தமிழ் வளர்த்த அகத்தியர் வாழ்ந்த இடமும், சங்கம் மருவிய இடமுமான பாண்டி நாட்டின் பழைய மக்கள் கடவுளை ஆலவாய்ச் சொக்கன் என்ற பெயரால் வழிபட்டனர். சொக்கு என்பதன் பொருள் பேரழகு. வைணவப் பழம்பதியாகிய திருமாலிருஞ்சோலையில் உள்ள கடவுளை அழகன் என்றே தமிழ் மக்கள் வழிபட்டு வருகிறார்கள். யான் எனது என்னும் செருக்கற்று வழிபடுவோரே அவ்வழகனைக் காண்பர் என்பது தமிழ்ப் பெரு முனிவர்கள் கருத்து. பார்க்க : அலங்கார சாஸ்திரம். அ. சு. நா. பி.

அழகியல் உளவியல் : மக்கள் சில இயற்கைக் காட்சிகளையும் பாடல்களையும் ஓவியங்களையும் சிற்பங்களையும் அழகானவை என்று எண்ணி அதன் காரணமாக மகிழ்ச்சியடைகின்றார்கள். இதுதான் அழகு அனுபவம் எனப்படும். இந்த அனுபவத்தின் இயல்பையும் காரணத்தையும் துருவி அறிய உளவியலார் முயல்கிறார்கள். ஆனால் இந்த அனுபவம் உண்மையாகவும் உளம் நிறைந்ததாகவும் இருக்குமானால் அதை