பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்ட்ரூஸ், சார்லஸ் பிரீர்

362

ஆண்டாள்

அணிகள் அம்சுத்பேதாகமம், மானசாரம், சில்பரத்னம், பாத்மசம்ஹிதா போன்ற ஆகமங்களில் நன்கு சொல்லப்பட்டுள்ளன. பண்டைக்காலத்தில் சங்கு, பவளம், முத்து மிக உபயோகப்பட்டன. ஆனால், இக்காலத்தில் வைரங்களே வெகுவாக உபயோகிக்கப்படுன்றன.

படம் 6. ஆரங்கள்
உதவி : வை. மு. நரசிம்மன்

இன்னும்,அழகிலும் வேலைப்பாட்டிலும் பண்டைக்கால நாட்டார் இந்தியர்களைப்பற்றி நன்கு அறிந்துகொள்ள அணிகள் மிக மேம்பட்டே விளங்குகின்றன. பல நூற்றாண்டுகள் ஆகியும், பல புராதன அணிகள் இன்றைக்கும் ஒரு சிறிய அளவு மாறுதலுடனேயே உபயோகப்பட்டு வருகின்றன. வை. மு. ந.

ஆண்ட்ரூஸ், சார்லஸ் பிரீர் (1871-1940) ஒரு பிரிட்டிஷ் பாதிரியார். இவர் கேம்பிரிட்ஜிலுள்ள வெஸ்கட் அவுஸ் கல்லூரியின் உபதலைவராக இருந்தார். பிறகு இந்தியாவிற்கு வந்து 40 ஆண்டுகள் அந்நாட்டின் நன்மைக்காக உழைத்தார். ரவீந்திரநாத் தாகூர் ஏற்படுத்திய சாந்தி நிகேதனத்துக் குருகுலத்தில் 1913-ல் சேர்ந்தார். தென் ஆப்பிரிக்காவில் குடியேறிய இந்தியத் தொழிலாளிகளின் நன்மையைக்

ஆண்ட்ரூஸ்

கோரிக் காந்திஜி தொடங்கிய சத்தியாக்கிரகத்திற்கு முழு ஆதரவும் அளித்தார். கடல் கடந்து சென்ற இந்தியர் நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பிஜி தீவுகளுக்கும், கெனியா, பிரிட்டிஷ் கயானா முதலிய இடங்களுக்கும் சென்றார். இந்தியர்களுடைய சமூக, அரசியல் எண்ணங்களை யுணர்ந்து அவர்கள் கோட்பாடுகளை யாதரித்தார். சுய நலம் சிறிதும் இல்லாதவர் ; எளிய வாழ்க்கையிலும் உயர்ந்த எண்ணங்களிலும் முழுவதும் நம்பிக்கை யுள்ளவர். இவர் காந்திஜியோடு கொண்டிருந்த நட்பும் தொடர்பும் இவரை இந்தியர்களுள் ஒருவராகவே செய்துவிட்டன. இவரை இந்தியர்கள் 'தீனபந்து' என்னும் பட்டப்பெயரால் அழைத்தனர். இவர் எழுதிய பல நூல்களால் மேல் நாட்டார் இந்தியர்களைப்பற்றி நன்கு அறிந்துகொள்ள முடிந்தது.

ஆண்டர்சன், ஹான்சு கிறிஸ்தியன் (1805-1875) டென்மார்க் நாட்டுக் கவிஞர்; நவீனங்களும் கதைகளும் எழுதுபவர். தேவதைக்கதைகள் எழுதுவதில் மிக்க புகழ் பெற்றவர். இவருடைய இலக்கியங்கள் ஜெர்மன், ஆங்கில, டச்சு, ரஷ்ய மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவருடைய ஏனைய இலக்கியங்களைக் காட்டிலும் தேவதைக்கதைகளே உலகப்புகழ் பெற்றவை. கே. ஆர்.

ஆண்டாள் பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரிலே நந்தனவனத்தில் துளசிவனத்திடையே பெரியாழ்வார் கண்டெடுத்துக் கோதையார் என்று பெயரிட்டு வளர்த்துவந்த பெண்மணி. இவர் பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டதால் 'ஆழ்வார் திருமகளார்' என்றும், தாம் சூடிக்களைந்த மாலையினை இறைவனுக்கு அணிவித்து வந்ததால் 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடியார்' என்றும், பிரபந்தங்கள் மூலமாக உலக மக்களை உய்வித்து அடிமைகொண்டவராகக் கருதப்படுவதால் 'ஆண்டாள்' என்றும் அழைக்கப்படுவார்.

இளமையிலேயே எல்லாக் கலைகளும் நிரம்பி, இறைவனிடத்தில் கொண்ட பிரேமையே ஓர் உரு என்னலாம்படி அவனை விட்டு உயிர் ஆற்றகில்லாத நிலையினையடைந்து, மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லாத வைராக்கியத்தையும் உடையவராய்த் திகழ்ந்தார். பின்னர், ஆழ்வார் இறைவனுடைய நியமனப்படி கோதையாரைப் பரிவாரங்களுடன் மணக்கோலமாகத் திருவரங்கப் பெருநகர்க்கு அழைத்துச் சென்று, அழ-