பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியவரசர் யாழ்ப் பிரமதத்தனார்

421

ஆரீலியா

சரஸ்வதி, கங்கை, அதன் உபநதியாகிய யமுனை ஆகிய ஆறுகள் பாயும் பிரதேசம் வரையிலும் பரவியது. இவை சப்தசிந்து, மத்தியதேசம் என்ற பெயர்க ளுடன் வழங்கின. ஆரியர்களைப்பற்றிய மற்ற விவரங் களுக்குப் பார்க்க: இந்தோ-ஆரியர். கூ. ரா. வே.

ஆரியவரசர் யாழ்ப் பிரமதத்தனார் செந்தமிழிலே யன்றி யாழிலும் வல்லவராக இருந்திருக்கலாம். குறுந்தொகையில் 184ஆம் பாடலைப் பாடியுள்ளார். ஆரிய அரசர் தமிழிலும் வல்லவராக இருந்தனர் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு.

ஆரியவரசன் பிரகத்தன் : இவ்வரசனுக்குத் தமிழ் அறிவுறுத்தற்குக் கபிலர் என்னும் புலவர் பத்துப் பாட்டில் ஒன்றாகிய குறிஞ்சிப் பாட்டைப் பாடினர்.

ஆரினாக்கோ தென் அமெரிக்காவில் நீளத்தில் நான்காவது ஆறு. பிரேசில் எல்லையின் அருகில் வெனிசூலாவிலுள்ள பாரிமா பீடபூமியில் தோன்றிக் கரிபியன் கடலில் சேர்கிறது. கடலிற் சேருமுன் 100 மைல் தொலைவில் டெல்டாவாகப் பிரிகிறது. டெல்டா 5.000 ச.மைல் பரப்புடையது. ஆறு 1,500 மைல் நீளம். முகத்துவாரத்திலிருந்து உள்ளே 260 மைல் தொலைவுவரை நீராவிக் கப்பல்கள் செல்லும். ஆரினாக்கோ ஆற்றுவாணிபத்தின் கேந்திர நகரம் சியூடாட்பாலிவர்.

ஆரிஸ்டாபனீஸ் (Aristophanes) (கி.மு. 448?-385) இன்ப நாடகங்கள் எழுதியுள்ள கிரேக்க ஆசிரியர்களுள் தலை சிறந்தவர். அவருடைய நாடகங்கள் நகைச்சுவையும், எள்ளித் திருத்தும் சுவை யும் நிறைந்தவை, அவர் ஐம்பத்தாறு நாடகங்கள் செய் யுள் நடையில் இயற்றினார். ஆனால் இப்போது கிடைப் பவை பதினொன்றே. அவருடைய நடையும் சந்தமும் மிகவும் உயர்ந்தவை. அவருடைய நாடகங்கள் அவர் காலத்துச் சமூக வாழ்வின் ஓவியங்களாக விளங்குகின் றன. அவற்றுள் சிறந்தவை வீரர்கள், முகில்கள், குளவிகள், பறவைகள், தவளைகள் என்னும் பொருள் படும் கிரேக்கப் பெயரின.

ஆரீலியஸ், மார்க்கஸ் (121-180) 161லிருந்து 180 வரை ரோமானியப் பேரரசை ஆண்டவர். இவர் காலத்தில் எதிரிகள் சாம்ராச்சியத்தின் எல்லைகளை எல்லாம் தாக்கியபடியால் இவர் ஓயாமல் போர் புரியவேண்டியிருந்தது. ஆயினும் போர்களுக்கு இடையே மற்ற அலுவல்களிலும் இவர் உள்ளம் ஈடுபட்டது. தத்துவ ஆராய்ச்சியில் மிகுதியும் ஈடுபட்டவர். இவர் இயற்றிய சிந்தனைகள் என்னும் பெயர்கொண்ட நூலில் இவருடைய தூய உள்ளப்பான்மை நன்கு வெளியாகின்றது. நல்லொழுக்கமும் நேர்மையுமே வாழ்க்கையில் மக்களின் குறிக்கோளாக இருத்தல்வேண்டும் என்று இவர் வற்புறுத்தினார். டி. கே. வெ.

ஆரீலியா சொறிமீன் (த.க.) சாதிகளில் ஒன்று.

ஆரீலியா


உதவி : அப்பய்ய ரெட்டி.

1. மேற்புறத் தோற்றம் : a. எதிர் ஆரக் கால்வாய். b. இடை ஆரக் கால்வாய், c. துணை ஆரக் கால்வாய், d. பாலணுச் சுரப்பி, (உடம்பின் உள்ளிருக்கும் பாலணுச் சுரப்பிகளும், கீழ்ப்புறமிருக்கும் வாயும். ஒளிபுகும் ஊன்பசை போன்ற தன்மை யுடைய உடற்பொருள் வழியே மேலே தெரிகின்றன).
2. கீழ்ப்புறத் தோற்றம்: a. வாய். b பாலணுச் சுரப்பி, C. ஓரப்பற்றுறுப்பு. d. வட்டக் கால்வாய், e. உணர்ச்சிக் கருவி. f. வாய்க் கொடி (பாலணுச் சுரப்பியின் உட்பக்கத்தில் கரிய நீள்வட்டமாகத் தெரிவது கருக் கீழ்க் குழி).
3. பக்கத் நோற்றம்: நடுவில் நான்கு வாய்க்கொடிகளும்

ஓரத்தில் பற்றுறுப்புக்களும் தொங்கிக்கொண்டிருக்கின்றன.

உலகத்தின் பல கடல்களில் சாதாரணமாகக் காணப்படுவது. இதில் ஆண் வேறு, பெண் வேறு. இதன் வளர்ச்சியில் பல படிகள் உண்டு. இதற்கு இனப்பெருக்கச் சுரப்பிகள் வயிற்றுப் பைகளின் அடிப்பாகத்தில் குதிரைலாட வடிவத்தில் அமைந்துள்ளன. முதிர்ந்த இனப்பெருக்க அணுக்கள் வயிற்றுப்பையில் சிந்தப்படுகின்றன. விந்தணுக்கள் பிராணியினுடம்பினின்று வெளியேறி, இன்னொரு பிராணியின் வயிற்றுப்பைக்குள் உட்செல்லும் நீரோடு சென்று, அங்குள்ள அண்டத்தோடு இரண்டறக் கலக்கின்றன. கரு வளர்ந்து பிளானுலா என்ற லார்வா நிலையடைகின்றது. இந்தச் சிறு பிளானுலா, தன் உடம்பின்மேல்