பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசை

513

இசை

என்பதும் சுர ஸ்தானம் என்பதும் ஒன்றல்ல என்பதை அறிகிறோம். ஒரே சுர ஸ்தானத்தில் பலவித ரஞ்சகமுள்ள சுரங்களை நாம் கையாளுகிறோம். வீணையில் ஒரே மெட்டில் கைவிரலின் அசைவினாலும் அழுத்தத்தினாலும் பற்பல சுர வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய நுண்ணிய பேதங்கள் தான் கருநாடக இசைக்கு உயிர். ஆர். ஸ்ரீ.

இராகம் என்பது ஓர் இசைத் தத்துவம். அது இந்திய இசையின் முக்கிய அமிசமாகும். உருப்படிகளின் மூலமாகவும், ஆலாபனை, தாளம், நிரவல், கற்பனைச்சுரம் முதலியவைகளின் மூலமாகவும் இராகங்களின் வடிவங்களை உணர்கிறோம். ஒவ்வோர் இராகத்திற்கும், இன்னின்ன சுரங்களே வரவேண்டுமென்று ஒரு கிரமம் உளது. ஒவ்வோர் இராகத்தின் வடிவத்தையும் தெளிவாக விளக்கும் பிரயோகங்கள் உள். அவைகள் ரக்திப் பிரயோகங்கள் எனப்படும்.

இராகலட்சணம் : ஓர் இராகத்தின் லட்சணத்தைப் பின்வரும் அமிசங்களால் அறியலாம். 1.ஜனகராகமாயிருந்தால், அதன் வரிசை எண்ணும் சுரங்களும் ; 2. ஜன்யராகமாயிருந்தால் அதன் தாய் ராகத்தின் பெயரும் எண்ணும்; 3. ஆரோகணம் அவரோகணம்; 4. இராகத்தில் வரும் சுரங்கள் ; 5. வர்ஜ. வக்ரசுரங்களின் பெயர்கள்; 6. ஒளடவமா ஷாடவமா, சம்பூர்ணமா? பிரிவு : நிஷாதாந்தியமா, தைவதாந்தியமா, பஞ்சமாந்தியமா ; உபாங்கமா, பாஷாங்கமா? 7. பாஷாங்க ராகமாயிருந்தால், அதில் வரும் அன்னிய சுரங்களும், அவைகள் தோன்றும் சுரத்தொடர்களும்; 8. ஜீவ சுரங்கள், நியாச சுரங்கள், அம்ச சுரங்கள்; 9. ரஞ்சகப் பிடிப்புக்களும், விசேஷ சஞ்சாரங்களும்; 10. தாட்டுப் பிரயோகங்களும், அபூர்வப் பிரயோகங்களும் ; 11. இராகத்தில் தோன்றும் நுட்ப சுருதிகள் ; 12. இராகத்திற்குரிய கமகங்கள் ; 13. இராகம் விளைவிக்கக் கூடிய ரஸம் அல்லது ரஸங்கள்; 14. பாடவேண்டிய காலம்; 15. உருப்படிகள் தொடங்குவதற்குத் தகுதியான சுரங்கள்.

மேளகர்த்தாக்கள்: இந்திய இசைக்கு இராகங்களே அடிப்படை. அவை ஜனகராகங்கள், ஜன்யராகங்கள் என இருவகைப்படும். ஜனகராகத்திற்கு மேளகர்த்தா ராகம், மேளராகம், கர்த்தா ராகம், சம்பூர்ண ராகம், தாய் ராகம் என்னும் பெயர்களும் உள. மேளகர்த்தாராகங்களில் ஏழு சுரங்களும், ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் வரிசைக் கிரமமாக வருவதுடன், ஆரோகணத்தில் எவ்வகைச் சுரம் வருகிறதோ, அதேவகையான சுரம் அவரோகணத்திலும் வரும். இம்மாதிரி மேளகர்த்தா ராகங்களின் தொகை 72. பன்னிரண்டு சுரஸ்தானங்களிலிருந்து மேற்கூறிய மூன்று லட்சணங்களுடன் வரக்கூடிய மேளங்களின் தொகை எழுபத்திரண்டேயாகும். ஆனால் ஆரோகணத்தில் ஒரு மேளம் அவரோகணத்தில் மற்றொரு மேளம் வரலாம் என்னும் நோக்கத்துடன் பிரஸ்தரிக்கும் காலத்தில் 72×72= 5184 மேளங்கள் வரும். இந்த முறையில் 72 நீங்கலாக, ஏனைய 5112 மேளங்களும் மிச்ர மேளங்களாகும். வேங்கடமகியால் 72 மேளங்கள் 17 ஆம் நூற்றாண்டில் பிரஸ்தரிக்கப்பட்டன.

இவை அனைத்தும் 12 சக்கரங்களில் வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சக்கரத்திலும் 6 மேளங்கள் இருக்கும். ஷட்ஜம், பஞ்சமம் என்னும் சுரங்கள் எல்லா மேளங்களுக்கும் உரித்தானவை. முதல் ஆறு சக்கரங்களில் அதாவது 1 முதல் 36 வரையுள்ள மேளங்களில் சுத்த மத்யமமும், பின் ஆறு சக்கரங்களில் அதாவது 37 முதல் 72 வரையுள்ள மேளங்களில் பிரதி மத்யமமும் வரும். இக் காரணம் பற்றி முன்னவை சுத்தமத்யம சக்கரங்களென்றும், பின்னவை பிரதிமத்யம சக்கரங்களென்றும் அழைக்கப்படும். 1 முதல் 36 வரை பூர்வமேள கர்த்தாக்களென்றும், 37 முதல் 72 வரை உத்தர மேளகர்த்தாக்களென்றும் கூறுவர். பூர்வ பாகத்திலும் உத்தர பாகத்திலும் மேளங்கள் ஒரு வரிசைக் கிரமத்தை அனுசரித்து அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு சக்கரத்திலுமுள்ள ஆறுமேளங்களில் கீழ்க்கண்டவாறு சுரங்கள் வரும் :-முதல் சக்கரம்: சுத்த ரிஷபம், சுத்த காந்தாரம்; இரண்டாம் சக்கரம்: சுத்தரிஷபம், சாதாரண காந்தாரம்; மூன்றாம் சக்கரம்: சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம்; நான்காம் சக்கரம்: சதுச்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம்; ஐந்தாம் சக்கரம் : சதுச்ருதி ரிஷபம், அந்தரகாந்தாரம்; ஆறாம் சக்கரம்: ஷட்ச்ருதி ரிஷபம், அந்தரகாந்தாரம். ரிஷப காந்தார சுரங்கள் இதே முறையை அனுசரித்து 7, 8, 9, 10, 11, 12 சக்கரங்களில் முறையே வரும். ஒவ்வொரு சக்கரத்திலும் தைவத நிஷாத சுரங்கள் பின்வரும் வரிசைக் கிரமமாக வரும் :

முதல் மேளத்தில் சுத்த தைவதம் சுத்தநிஷாதம்
2 ஆம்

,,

,,

கைசிகி ,,
3 ஆம்

,,

,,

காகலி,,
4 ஆம்

,,

சதுச்ருதி தைவதம் கைகிசி ,,
5 ஆம்

,,

,,

காகலி ,,
6 ஆம்

,,

ஷட்ச்ருதி தைவதம் காகலி ,,

இவற்றினின்றும் ரிஷப காந்தார சுரங்கள், சக்கரத்திற்குச் சக்கரம் வித்தியாசமடைகின்றன வென்றும், தைவத நிஷாத சுரங்கள் ஒவ்வொரு சக்கரத்திலும் கர்த்தாவிற்குக் கர்த்தா வித்தியாச மடைகின்றனவென்றும் தெளிவாகும்.

இந்தப் பன்னிரண்டு சக்கரங்களுக்குப் பூதசங்கியை என்னும் முறையை அனுசரித்து, இந்து, நேத்ர, அக்னி, வேத, பாண,ருது, ரிஷி,வசு, பிரம்ம, திசி, ருத்ர, ஆதித்ய என்னும் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேளகர்த்தாக்களுக்கு, கடபயாதி சங்கியை என்னும் முறையை அனுசரித்துப் பெயர்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. 72 மேளகர்த்தாக்கள் வருமாறு


சுத்தமத்யம மேளங்கள்
1. கனகாங்கி 19. ஜங்காரத்வனி
2. ரத்னாங்கி 20. நட பைரவி
3. கானமூர்த்தி 21. கீரவாணி
4. வனஸ்பதி 22. கரஹரப்ரியா
5. மானவதி 23. கௌரிமனோஹரி
6. தானரூபி 24. வருணப்பிரியா
7. சேனாவதி 25. மாரரஞ்சனி
8. ஹனுமத்தோடி 26. சாருகேசி
9. தேனுக 27. சாரங்கி
10. நாடகப்ரியா 28. ஹரிகாம்போஜி
11. கோகிலப்ரியா 29. தீரசங்கராபரணம்
12. ரூபாவதி 30. நாகாநந்தினி
13. காயகப்பிரியா 31. யாகப்பிரியா
14. வகுளாபரணம் 32. ராகவர்தினி
15. மாயாமாளவகௌள 33. காங்கேய பூஷணி
16. சக்ரவாகம் 34. வாகதீச்வரி
17. சூர்யகாந்தம் 35. சூலினி
18. ஹாடகாம்பரி 36. சலநாட