பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணில்

55

அணில்

இதனைப் பின்வரும் செய்திகள் உறுதிப்படுத்தும் (1) பொருளணியின் வகையாக அணியியல் கூறிய அணிகள் 27; தண்டியலங்காரம் 35; மாறனலங்காரம் 64; குவலயானந்தம் 100; இவ்வாறு மேலும் பல அவரவர் கொள்கைத்திறத்திற் கேற்ப விரிகின்றன. (2) ஓர் அணிக்கு ஒருவர் இட்ட பெயரை வேறொருவர் இன்னொரு பெயரால் சொல்வது; (3) ஒருவர் இவை அணியல்ல என்று விட்டதை இன்னொருவர் அணியாகக் கூறுவது; (4) எழுத்து, சொல், பொருள் யாப்புப் பற்றிய சில இலக்கணங்களைச் சிலர் அணிகளாகக் கூறுவது. (5) ஓர் அணியின் வகையை இன்னொருவர் தனித்த ஓர் அணியாகக் கூறுவது முதலியவை.

அணியையும் சேர்த்து முதன் முதல் ஐந்திலக்கணம் கூறிய நூல் வீரசோழியம் (11ஆம் நூற்). பிந்தியவை இலக்கண விளக்கம், தொன்னூல் முத்துவீரியம் என்பன அணியை மட்டும் முதன் முதல் உணர்த்தியது. அணியியல்; பிறகு தண்டியலங்காரம், மாறனலங்காரம் முதலியன. சேனாவரையர் உரையால் அணியியல் என வேறாக ஒரு நூல் இருந்தமை தெரிகின்றது. ஆனால், அடியார்க்குநல்லார் மேற்கோளின்படி தண்டியலங்காரமே அணியியல் என்று வழங்கப்பட்டதோ என்று கருதவேண்டி யிருக்கிறது.

அணி, பொருளணி, சொல்லணி என இருவகை. சொல்லணி கவர்ச்சியற்ற செயற்கைத் தன்மையுள்ளது. சித்திரகவிகள், யமகம், திரிபு முதலியவை இதில் அடங்கும். பிற்காலத்தார் இடர்ப்பட்டேனும் இவற்றை இயற்றுவதே புலமைத்திறமெனக் கொண்டனர். வேறு எக்காலத்தவரும் இவற்றைப் பாராட்டவில்லை.

தண்டியலங்காரம் வடமொழிக் காவியாதரிசம் என்னும் நூலின் மொழிபெயர்ப்பென்பர். திருக்குருகைப் பெருமாள் கவிராயர் இயற்றிய மாறனலங்காரம் மொழி பெயர்ப்பன்று; ஆசிரியரால் தமிழில் தனியே எழுதப்பட்டது. பார்க்க: அலங்கார சாஸ்திரம். அ. கி.

அணில்: மரக்கிளைகளிலும் மனைமுன்றில்களிலும் ஓடியாடும் அணில் எல்லோரும் அறிந்துள்ள சிறு விலங்கு. இது காட்டு விலங்கேயாயினும் மனிதனோடு கூட்டுறவுடையதாகி மனிதர் நெருக்கமுள்ள நகர் நடுவிலும் வாழ்கின்றது. இதன் அழகும், மென்மையும்,

அணில்

அமைதியான தோற்றமும், ஒளி நிறைந்த கண்களும், சுறுக்கான பார்வையும், விரைவும், சுறுசுறுப்பும், சிற்றொலிக்கும் மருண்டு ஓடியொளிக்குமியல்பும், எளிதில் பழகும் பண்பும் இதனை மனிதன் விரும்பிக் காண்பதற்குக் காரணமாக இருக்கின்றன. இதனைச் செல்லமாக அணிற்பிள்ளை என்று அழைக்கிறோம். இராமபிரான் அணைகட்டும்போது இந்தச் சிற்றுயிரும் தன்னாலான எளிய தொண்டைச் செய்தது என்றும் அவர் அதனைப் பாராட்டி அன்போடு தடவிக் கொடுத்தார் என்றும் சொல்லும் உருக்கமான கதையும் இதனிடத்து இரக்கம் உண்டாகச் செய்கிறது.

அணில்களிற் பல சாதிகளும், பல இனங்களும் உண்டு. இவற்றின் உடல் பொதுவாக மெலிந்திருக்கும். வால் மயிரடர்ந்து தினைக்கதிர் போல உடலளவு நீளமாக அல்லது அதைவிட நீளமாக இருக்கும். இந்த வாலைத் தரையில் படாமல் பின்னுக்குத் தூக்கி நீட்டிக்கொண்டு போகும், அல்லது மேலே உயர்த்தி வைத்திருக்கும். பின் காலைக் குந்துக்காலிட்டு உட்கார்ந்துகொண்டு உடம்பை உயர்த்தி முன் காலில் பழத்தையோ, கொட்டையையோ தானியத்தையோ பற்றிக்கொண்டு கொறிப்பது இவற்றிற்கு வழக்கம். அணில்களிற் சிலவகைகள் மிகச்சிறியவை.

ஏழெட்டு அங்குலத்துக்குள் இருக்கும். சில

பெரிய அணில்

பூனையளவு பெரிதாக இருக்கும். வாலைச் சேர்த்து இரண்டடி நீளமிருக்கலாம். சில தரையில் வாழும். சில மரத்தில் வாழும். சிலவற்றிற்குக் காது சிறுத்திருக்கும். சிலவற்றிற்குக் காது முனையில் மயிர் குச்சமாக இருக்கும்; சிலவற்றிற்கு முயலுக்கிருப்பது போல நீண்டு அழகாக இருக்கும். சிவப்பும், பழுப்பும், சாம்பலும், கறுப்புமான பல நிறமான அணில்களுண்டு. சிலவற்றிற்குக் கோடுகள் உண்டு. சில பறக்கும் அணில்கள். பறப்பதென்றால் சிறகை அடித்துக்கொண்டு பறவைகளைப்போலச் செல்வதன்று. இவற்றின் இரு பக்கங்களிலும் உடலையும் முன்பின் கால்களையும் சேர்த்து மெல்லிய தோல் மடிப்புக்களிருக்கின்றன. அணில் ஒரு மரத்திலிருந்து ஆகாயத்தில் தாவி இந்தப் பக்கமடிப்புக்களை விரித்துக்கொள்ளும். காற்றில் மிதந்து சறுக்கிக் கொண்டேபோய் 70, 80 கஜத் தொலைவிலுள்ள இன்னொரு மரத்தைச் சேரும். தோல்மடிப்புக்கள் பாரஷூட் (Parachute) போல அணிலைத் தாங்கிக் கொள்ளுகின்றன. பிள்ளைகள் காகிதத்தை மடித்து எறியும் விளையாட்டுவிமானம் போல இந்தப் பறக்கும் அணில் செல்லும். அணில்கள் சத்தம்போடும்; வீட்டு அணில் பறவை ஒலிபோல வீச்சுவீச்சு என்று நெடு நேரம் உரக்கக் கூவும். ஒவ்வொரு ஒலிக்கும் வாலை எற்றியெற்றி ஆட்டும். அணில்கள் பாலூட்டி (Mammalia)த் தொகுதியில், ரோடென்ஷியா (Rodentia) என்னும் கொறிக்கும் விலங்கு வரிசையைச் சேர்ந்தவை. இந்த வரிசையிலுள்ள எலி, முள்ளம்பன்றி, முயல் ஆகியவற்றைப்போலத் தமது உளிபோன்று கூரான விளிம்புள்ள முன் பற்களால் உணவைக் கொறித்துக் கொறித்துத் தின்பவை. அணில்கள் ஸ்கையூரிடீ (Scturidae) என்னும் குடும்பத்தில் அடங்கும். இவை

பழம், கொட்டை, தானியம், இலை, பட்டை, கிளைகளின்

பறக்கும் அணில்

மென்மையான நுனி முதலியவற்றைக் கரண்டிக் கரண்டித் தின்னும். பழத்தோட்டங்களில் அணில் மிகுந்த கேடு விளைக்கும். கிளிகளைக் கடிவதுபோல அணில்களையும் ஓட்டிக்கொண்டு காவலிருக்க வேண்டும். மாதுளம்பழம் முதலியவற்றிற்கு இவை கடிக்காதபடி தகரத்தால் மூடி செய்து போடுவதுண்டு. சிறு பூச்சிகளையும் தின்னும். பறவைக் கூடுகட்புகுந்து முட்டைகளையும் குஞ்சுகளையும் தின்றுவிடுவதுமுண்டு.

அணில்கள் மரக்கிளைகளிலும், பொந்துகளிலும், வீட்டில் சுவரிலுள்ள சந்துகளிலும், இறவாணத்திலும், இலை, புல், வைக்கோல், நார் இவற்றால் கூடுகட்டும். வீட்டில்