51 என்உயிரின் அணுவாகி உணர்வின் பிழிவாகி தெளிந்த மலரோடைத் தேனின் கசிவாகி கலைஞர் மேல் காதல் கொண்டேன் இன்று உருகி நிற்கும் மாணவச் செல்வங்களே! உ உங்கள் அனைவரையும் மாதவர் கல்லூரியின் சார்பில் வரவேற்கின்றேன்! ஓ! நான் மட்டும் வரவேற்க வந்தவனா? உங்களையா? அதுவும் உறவில் விரிசல் இல்லாத நமக்குள்ளே ஒருவர்க்கொருவர் வரவேற்பா? இல்லை நாம் அனைவருமே வரவேற்புப் நாடே வரவேற்று நாளும் மகிழ்ந்து பாட வந்திருக்கிறோம்! கொண்டிருக்கும் வேளையில் கூட இருக்கும் நாம் கும்பிட்டு வரவேற்போம்! அதுவும், தங்கப் பட்டயத்தில் தங்குகின்ற நன் மணியை! உயர்ந்ததோர் கோபுரத்தின் உச்சிக் கலசத்தை! சங்கத்தமிழழகைச் சாற்றும் போதெல்லாம் பொங்கிப் பெருக்கெடுத்துப் புனல்வற்றா வெள்ளத்தை! ஊற்றுக் குறையாத உண்மை அறிஞனை மாற்றுக் குறையாத மாணிக்கப் பேழையை! ஏற்று வரவேற்போம்! எல்லோரும் வரவேற்போம்! இது பாலை மண்!- அல்ல திருவளர்கின்ற பாலை - பிரிவையே பெரிதும் பேசித் திருப்பாலை மண். தலைவன் தலைவிக்குள் பெரும் பாசம் விளைத்துவிடும் பாலை மண்! ஊர் விட்டுப் போனாலும் யார் விட்டுப் போனாலும்
பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/52
Appearance