பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அறுவடை
–ஆர். ஷண்முகசுந்தரம்–

‘கூளப்ப நாயக்கன் காத’லையோ, அல்லது ‘விறலி விடுதூ’தினையோ ஏறெடுத்தும் பார்க்காத நாகரிக மனிதரும் வயோதிக மைனருமான சின்னப்ப முதலியாருக்குப் பலபெண்களைத் தன் இன்பத்துக்குப் பயன்படுத்திக்கொண்ட பரி பக்குவத்துக்குப் பிறகு, மீண்டும் திருமண ஆசை தலையெடுக்கிறது. நண்பர் கறுப்பண்ண முதலி அதற்கு ஒத்து ஊதுகிறார். மனைவி இறந்த பின், பெண்களுடன் ஊடாடிப் பழகியே வந்துவிட்ட சின்னப்ப முதலியாருக்கு கடைசி காலத்துக்கு மனைவி வேண்டும் என்று எண்ணுவது நண்பர் கறுப்பண்ண முதலியாருக்குச் சாதகமாக இருக்கிறது. பெரும் பணக்காரராகிய சின்னப்ப முதலியின் திருமணத்துக்குப்பின் தன் அருமை மகன் கல்யாணத்தையும் சின்னப்ப முதலியாரின் பணத்திலேயே நடத்தி விடுகிற திட்டம் கறுப்பண்ண முதலிக்கு உண்டு. இத் திட்டத்தைச் செயலாக்க அப்பாவி நாச்சிமுத்து அகப்படுகிறான்.

99