பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதைக்கு ஓர் அம்சம்!

கதைச் சுருக்கத்துக்குப் பின் கதையம்சம் என்று ஒன்றினைச் சொல்லிவிட்டால், கதையின் மூலக்கூறுகள் பிடிபட்டுவிடும் அல்லவா? கொங்கு நாட்டுச் சிற்றூர் ஒன்றில். இளைஞன் ஒருவனின் காமத்துக்கு அறுவடையாகிவிடுகிறாள் ஓர் அழகி தன் வாழ்வை, புன்மை நிறைந்து வழியும் வாழ்வாக ஆக்கிக் கொள்ள விரும்பாமல், தன் வாழ்வையே அறுவடை செய்து, உளுத்துப்போன மரத்தினின்று உதிரும் கடைசிக் கனிபோல வீழ்ந்த தமிழ்ப் பெண் தேவானைதான் இந் நாவலின் கதைக்கு ஓர் ஆணிவேராக இருக்கிறாள்.


அனுதாப முக்கோணம்!

அறம்கொண்டு மறம் கண்ட கன்னிப் பெண் தேவானை.

ஒருநாள்:

ஆள் உயரத்திற்குச் சம்பாச் சோளப் பயிர் பால் பூட்டையுடன் தலைதுாக்கி நின்றது.

இந்தக் சோளக்காடுதான், வேதனையின் மனம் தொட்ட சுப்பிரமணியத்திற்கு பேரின்பக்காடு.

அதோ, தேவானை!

அவள் வந்ததும், அவனை நெருங்கினான் இளைஞன். அணைத்தான். இன்ப மெத்தையிலே இருத்தினான். கண்னொடு ‘கண் இணை’ நோக்கின. அப்படியிருந்தும், இருவரும் பேசாமல் இருந்தார்களா? அதுதான் இல்லை. பேசினார்கள். “ஐயோ! ஏன் இப்படிப் பாக்கறிங்க?” என்றாள்.

102