பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆனந்திக்குக் கற்புப் பங்கம் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் தொடர்கின்றன.

சிந்தாமணியை இன்பம் துய்க்கத் தொடர்கிறது டைகரின் மோகக் கிறக்கம். இரத்தம், துப்பாக்கி, மாறுவேடம், நாத்திகப் பிரசாரம் போன்ற பஞ்சமா பாதகங்களுக்குப் பஞ்சமில்லை!

சிந்தாமணியோ, தன்மீது சார்ந்த பழியென்னும் கறையினைத் துடைக்கக் கங்கணம் பூண்டு துயரக் கரைகள் பலவற்றை மோதிச் சாடுகிறாள்.

முடிவில், அபலை சிந்தாமணியின் சோக முடிவும் நிகழ்கிறது. புனிதம் மண்டிய அதே வெள்ளிக்கிழமையிலே!

நாவுக்கரசர் பாடுகின்றார், ‘நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதீர்’ என்று. இப்பாடலில் வேண்டுதல் பண்பைக் காட்டிலும், ஆணையின் குரலே அடிநாதம் பரப்புகிறது. அன்றைக்குத் தாம் கண்ட வாழ்வின் நடைமுறைச் சோதனைகள் அனைத்தையும் சாதனையாக்கி, அதன் விளைபயனாகக் கிடைத்த பக்குவத்தின் துணை கொண்டு புறப்பட்ட ஆணையை நாற்றிசை நெடுகிலும் ஒலிபரப்புகின்றார். ஆணையில் நல்லெண்ணம் இருக்கிறது; அன்பு உருக்காட்டுகிறது; உலகம் வாழ வழியும் கிடைக்கிறது. அதனால்தான் நாம் இப்பாட்டைத் திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்கின்றோம். இன்றளவில், இது பயனுள்ள பாடல் வரியேயல்லவா?

சரி.

143