பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சீதாவின் சோக வரலாறு முற்றுப்புள்ளி
பெறுகிறது.

சூர்யா மனத்தூய்மையுடன் தாரிணியை
மணக்க இசைகிறான். அவள் அகமகிழ்கிறாள்.

ஆனால் முடிவோ வேறு வகையாகிறது.

தாரிணியை ராகவனும், பாமாவை சூர்யா
வும் கைத்தலம் பற்றுகின்றனர்!


ஆசியின் துணை:

‘உமா’ ஏட்டில், இலக்கியத் திறனாய்வுத் தொடரைத் தொடங்கியபொழுது, முதன்முதலாகப் “பாவை விளக்கு’’ என்ற நவீனத்தைக் குறிவைத்தேன். பிள்ளையார் சுழி போட்டுவிட்டு, நான் எழுதத் தொடங்கியவேளை, ‘கல்கி துணை’ என்ற துணைப்பிரிவை அமைத்து, அதில் இவ்வாறு எழுதினேன்: “உலகப் பேரறிஞர்களுள் ஒருவராக மதிப்புப்பெற்று, தமிழ் இலக்கிய வளத்துக்கு மாண்பு தரும் அமரர் கல்கி அவர்களின் ஆத்மார்த்தமான ஆசியின் துணைகொண்டு, கொண்டுசெலுத்த இப்பகுதியை ஆரம்பித்துள்ளேன்.”

ஆம்; தமிழ்ப்பேராசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின்மீதும், அவர்களின் எழுத்துக்களிலும் எனக்கு என்றைக்குமே ஓர் ஈடுபாடு உண்டு. பக்திபூர்வமான ஈடுபாடு. அத்தகையதோர் இணக்கக் குறிப்புக்கு ஓர் இலக்காகவே இப்பொழுது என் ‘கடமை’யை மேற்கொண்டிருக்கின்றேன்.

14