பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



‘என் கண்ணே! இப்படியே நீயும் லலிதாவும் உங்களுடைய ஆயுள் முழுவதும் சிநேகமாயிருங்கள்!’ என்று தன் அன்னையின் ஆசியைச் சுமந்துகொண்டு சீதா புறப்பட்டு லலிதாவிடம் வருகிறாள்.

லலிதாவுக்கு ‘அத்தங்காள்’-அத்தை மகள்-முறை வேண்டும் சீதா.

சீதாவின் ‘அம்மங்காள்’-மாமன் மகள் லலிதா.

லலிதாவும் சீதாவும் தோழிகள். தோழமை என்றால், உயிரும் உயிரும் கலந்த ஒட்டுறவு போல;

சீதாவும் அவள் அம்மாவும் ரெயிலை விட்டிறங்கி, மாட்டு வண்டியில் பயணம் செய்யும் பொழுது, வண்டி குடை சாய்கிறது. “அம்மா...அம்மா!... இதோ, நான் வெள்ளத்தில் முழுகப்போகிறேன். என்மேல் அலை வந்து மோதுகிறது. யாராவது என்னேக் காப்பாற்றுங்கள்!” என்று செல்வக்குமாரி சீதா அலறுகிறாள். சாலையின் ஓரத்திருந்த நீரோடையில் விழுந்து காலையும் கையையும் அடித்துக்கொண்டு “அம்மா! அம்மா நான் முழுகிப் போகிறேன்!” என்று ஓலமிட்ட இளம்பெண்மீது சூர்யாவின் கவனம் செல்கிறது.

அன்பின் விட்டகுறை, இந்தச் சக்திப்பைத் தொடுகிறது; தொட்டகுறையாக ஆகிறது.

லலிதாவும் சீதாவும் சந்திக்கிறார்கள்.
பாசமும் பாசமும் ஆரத் தழுவிக்கொள்கின்றன.

லலிதாவைப் ‘’பெண் பார்க்க’ப் பட்டினத்துப்படித்த மாப்பிள்ளை வரப்போவதாகத் தாக்கல் வருகிறது. சீதா அவளைக் கேலி செய்யாமல் இருப்பாளா?

19