பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அவன் ஓர் இளைஞன். இளமையில் முதுமைபெற்ற மனத்தைக் கொண்டவன். இலட்சிய மணம் நுகர்ந்து லட்சிய மணத்தைப் பரப்பக் கனவு கண்டவன். மணவாழ்வு மேடை அமைக்கக் காத்திருந்தும், இணங்க மறுத்தவன். தன்னக் கீழே தள்ளிவிட்டுத் தொடரமுடியாத உயரத்துக்குப் பூரணி போய்விட்டதாகக் கற்பனை செய்து, அந்த ஒரு முடிவிலையே தன் முடிவையும் எழுதி வைத்துக் கொண்டவன் போன்று வாழ்ந்த அற்ப ஆயுள்காரன் அவன். மனித மனங்கள் உருவாக்கிக் காட்டிய பலஹீனங்களின் கூட்டுச் சுமையினை தான் ஒருவனே தாங்க வேண்டுமென்று கருதியவனுக்கு நேராக நடந்தவன்; நடக்கக் கனவு கண்டவன். கடைசியில் அவனே கனவாகிப் போய்விட்டான்!

அரவிந்தன் ஓர் இலட்சியப் பிண்டம்!

திர்ப்புக் கட்டம்:

அரவிந்தனையும் பூரணியையும் எடை போட்டுப் பார்க்கின்றேன். பூரணியின் முழு வாழ்வை நிறுவை செய்து பார்க்கும் எனக்கு அரவிந்தனை ஏறெடுத்துப் பார்க்கப் பயமாக இருக்கிறது. ஏன் தெரியுமா? அரை குறையாக நின்றுவிட்ட வளர்கதையாகிப் போன அரவிந்தனின் உயிர்க் கூட்டைத்தான் என்னால் தரிசிக்க முடிகிறது. அவனது ‘உயிர்ப் பறவை’ அவ்வளவு சடுதியில் ஏன் பறந்தது?

“அரவிந்தன் சாகவில்லை!” என்று நா.பா. அவர்கள் பரிந்து பேசுகின்றார்,

‘ஆமாம், உண்மையிலேயே அரவிந்தன் சாகடிக்கப் படாமலிருந்திருந்தால்...?’

58