பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வழியில், உரிய முறைப்படி, உரிமையாக்கத் தவறிவிட்டார்; அவருக்கு இப்பணி பிடிபடவில்லை!

தாக்கரேயை (Thackeray) கதை உறுப்பினர்கள் ஆண்டனராம். ஆனால் நம் க. நா. சு. வோ நளினியை ஆள்கிறார், ஸ்காட் (Scott) கொண்டிருந்த கொள்கைக்கு எதிரானவர் இவர். கதையில் வருகின்ற ஏழெட்டு நிகழ்ச்சிகள் காரண காரியமின்றி நுழைக்கப்பட்டிருக்கின்றன.

‘இலக்கிய விமரிசகர் என்றால், தாமே இலக்கியம் படைத்துத் தோல்வியுற்றவர் அல்லர்!’-மேலைநாட்டுச் சிந்தனே இது. இக்குறிப்பு நினைவுக்கு வரும் நேரத்தில், எனக்கு ஓர் எண்ணம் எழுவது உண்டு. க. நா. சு. இப்போது இலக்கிய விமரிசகராக ‘அவதாரம்’ எடுத்திருப்பதும் நல்லதுதான். ஏனென்றால், இவருடைய இலக்கிய வெற்றி தோல்வியைப் பற்றிய முடிவைக்கூற வாய்ப்பு உண்டாகும் வேளையில், என் போன்றவர்களை நளினி காப்பாற்றுவாள்!’

உதிரிக் கதைக் கூடாகத் (Loose Pol) தோற்றம் தருகின்ற ‘நளினி’ திரு கா. நா. சு.வுக்கு மட்டுமல்ல, தமிழ்ப் புதின இலக்கியத்துக்கே ‘ஒரு கெட்ட சோதனை.’ கடைசியில் காணப்பெறும் நளினியின் நாலுவரிக் கடிதத்தைத் தவிர, சுவைப்பதற்கோ, சிந்திப்பதற்கோ ‘தொண்ணூற்றிரண்டு பக்க நாவலில்’ வேறு எதுவுமே இல்லை.

‘தம் சொந்தக் கஜக்கோலைக்’ கொண்டு ‘இலக்கிய நியதி’யைப் பற்றி உரையாடி ‘முதல் ஐந்து தமிழ் நாவல்கள்’ என்ற ஒரு விமரிசனக் கட்டுரைத் தொடரை க.நா.சு. எழுதினார். தி. ம.பொன்னுச்சாமி பிள்ளையின் நிகழ்ச்சிக் கோவை; பி. ஆர். ராஜா ராமய்யரின் ‘குணச்

97