பக்கம்:கல்வத்து நாயகம் (கவிதைகள்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

கல்வத்து நாயகம்

மாணாத வெவ்வினையின்
வாய்ப்பட்டு மற்றொன்றும்
பேணாத நாயேனைப்
பேயேனென் றெள்ளாமல்
நீணாத போதநவ
நீர்மையுற நேர்மைசெய்வீர்
காணாத காட்சிதருங்
கல்வத்து நாயகமே!

பார்காத்த வேந்தரெலாம்
பண்பினெடு நும்மலர்த்தாட்
சீர்காத்து முவ்வுலகுஞ்
சீர்த்துநின்றா ரந்தோயான்
ஞாகாத்த வெந்துயரின்
சூழலிடைப் பட்டுலைந்து
கார்காத்த பக்கியொத்தேன்
கல்வத்து நாயகமே!

பொல்லாரைக் கூடியவர்
போநெறிக்கே போந்தலைந்து
நல்லாரைக் காண்வநான்
நாணுகின்றேன் நாய்க்குணத்தேன்
இல்லாரை யுள்ளார்போன்
றெள்ளகிலீ ரேற்றருள்வீர்
கல்லாரை யும்புரக்குங்
கல்வத்து நாயகமே!

இன்னிசைப் பாமாலை

25

சேய்பிழையைத் தாய்பொறுப்பர்
சிற்றினத்தேச டேழையர்செய்
தேய்பிழையை மேலவர்க
ளெண்ணுவரோ வெண்ணருமிந்
நாய்பிழையை யார்பொறுப்பர்
நாடுமும்மை யன்றிமற்றோர்
காய்பிழையைக் காத்தருளுங்
கல்வத்து நாயகமே!

சூடுபடும் வல்வினையிற்
சூழ்பிணியி லாழ்துயரி
லீடுபடு மேழைபெனை
யீடேற்ற லாகாதோ
ஆடுபடுங் கைத்திரையி
லள்ளிவைத்த செம்பவளக்
காடுபடும் பெளத்திரைவாழ்
கல்வத்து நாயகமே!

மைதூக்கிச் சேலொதுக்கு
மங்கைமட மாதர்விழிக்
கெய்துக்கி நெஞ்சழுங்கி
யீடழிந்து நின்றவெனை
பைதூக்கி யாடாவப்
பாழ்நாகிற் புக்காமற்
கைதூக்கி யாளுமெங்கள்
கல்வத்து நாயகமே!