பக்கம்:கல்வத்து நாயகம் (கவிதைகள்).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

கல்வத்து நாயகம்

சந்தமுறும் வேதகலை
சாத்திரங்க ளத்தனையும்
பந்தமுறக் கற்றுணர்ந்தும்
பத்திநெறி நில்லாமற்
சொந்தமுறு மாடுமனை
சொத்துசுக மென்றலைந்தேன்
கந்தமுறக் காப்பீரோ
கல்வத்து நாயகமே!

விதியருத்து மாயைவழி
மேவுமின்ப துன்பமெனும்
பொதியருத்த மாழ்குநரும்
போந்திருந்து வாழ்த்துவரேல்
மதியருத்து மான்றமன
மாண்பருத்து மற்றுமுயர்
கதியருத்து நுங்காட்சி
கல்வத்து நாயகமே!

போதற்ற வெட்டவெளி
போந்திருந்து சும்மாதான்
வாதற்ற பேச்சற்ற
வாய்மைநிலை நில்லாமற்
பாதற்ற வெம்மயக்காம்
பாழ்ம்பெளவம் வீழ்ந்தந்தோ
காதற்ற ஆசியொத்தேன்
கல்வந்து நாயகமே!

இன்னிசை பாமாலை

29

வேல்சோர வோடரிக்கண்
மெல்லிநல்லார் வேட்கையினைப்
பால்சோர நின்றீர்த்த
பாசவலைப் பட்டொரீஇ
மேல்சோரக் கைசோர
மெய்சோர வாய்சோரக்
கால்சோர நின்றிருந்தேன்
கல்வத்து நாயகமே!

உண்ணுவதுந் தூங்குவது
மோய்ந்தெழுந்து மற்றையநாட்
கெண்ணுவதும் வேலையென
வெண்ணுநர்க்கா ளாகாமல்
பண்ணுவது நும்பூசை
பாடுவது நுங்கீர்த்தி
கண்ணுவது நும்மருளாங்
கல்வத்து நாயகமே!

சூதிட்ட வைம்புலனுஞ்
சூழ்ந்தகுண மாறுமொன்றாய்
வாதிட்டுத் தாழ்த்துமெனை
வம்பனெனத் தள்ளாமல்
ஏதிட்ட நும்மடிக்கீ
ழேய்ந்திருந்து போற்றுமுசை
காதிட்டுக் கேளீரோ
கல்வத்து நாயகமே!