பக்கம்:கல்வத்து நாயகம் (கவிதைகள்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

கல்வத்து நாயகம்

வேட்டகத்தி லுண்ணவெகு
வேட்கைகொளும் வீணனென
நாட்டகத்திற் சிக்கிமன
நாணுகின்றே னாயடியேன்
ஈட்டகத்தி னிச்சையற
வின்பதுன்ப மற்றவெளிக்
காட்டகத்தி லாட்டுகிற்பீர்
கல்வத்து நாயகமே!

வம்பூருந் துன்பவினை
வாரிபுக்கு மாதுயரால்
வெம்பூரு மேழையெனை
வேண்டியருள் தாரீரோ
அம்பூரும் பண்ணையெலா
மார்பவளக் கோடிடறிக்
கம்பூருங் கிற்கரைவாழ்
கல்வத்து நாயகமே!

சந்தமுற நுந்துணைத்தாள்
சார்ந்திருந்த சற்சனரைப்
பந்தமுற வோர்பொழுதும்
பற்றிநில்லாப் பாவியெனைத்
தொந்தமுற வாட்கொண்டு
துன்பவினை சூழ்வகற்றிக்
கந்தமுறக் காத்தருள்வீர்
கல்வத்து நாயகமே!

இன்னிசைப் பாமாலை

33

ஓலவட்ட வாருதியு
ளுற்றலைந்த வோர்துரும்பாச்
சாலவட்ட மிட்டழுங்குந்
தாசனெனை யாளவெனக்
கோலவட்ட வெண்குடைக்கீழ்க்
கூர்ந்தெழுந்து வாரீரோ
காலவட்ட மாமதியே
கல்வத்து நாயகமே !


எள்ளிருக்கு மெண்ணெயென
வெவ்வுலகுந் தானாகி
யுள்ளிருக்கு மெய்ப்பொருளை
யுள்ளுவந்து நாடாமல்
துள்ளிருக்கு மேழையுளத்
துன்பொழித்துக் காத்தருள்வீர்
கள்ளிருக்கும் பூம்பதத்தீர்
கல்வத்து நாயகமே !


சுட்டிவைத்த ஞானகலை
தோய்ந்தறிந்து மோய்ந்தமையா
தெட்டிவைத்த நெஞ்சினனா
யின்னலுழந் தேங்காமற்
கொட்டிவைத்த வெவ்வினையின்
கோளொழித்தாட் கொண்டருள்வீர்
கட்டிவைத்த பொக்கிஷமே
கல்வத்து நாயகமே !