பக்கம்:கல்வத்து நாயகம் (கவிதைகள்).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



38

கல்வத்து நாயகம்

முற்றவரும் பாடுபட்டு
முத்தியென்னென் றோராமல்
பற்றவரு மூணுடைக்கே
பாவியேன் சாவேனோ
நற்றவரும் ஞானநெறி
நாடுநரு நான்மறைநூல்
கற்றவரும் போற்றுமெங்கள்
கல்வத்து நாயகமே !

இறங்குவனோ நன்னெறிவி
லேய்குவனோ வின்புருவம்
பிறங்குவனோ மெய்யருளிற்
பேணுவனோ தூயநிலை
யுறங்குவனோ வானந்தத்
தொன்றுமின்றி யுள்ளுலைந்து
கறங்குவனோ யானறியேன்
கல்வத்து நாயகமே !

நில்லாத பொய்யுடம்பை
நீர்க்குமிழி யென்றுன்னிச்
செல்லாத காசாகச்
சிந்தையிடை தேர்ந்துமற்றொன்
 றில்லாத வேதபர
வின்பவெளி தேறவென்றுங்
கல்லாத புல்லானேன்
கல்வத்து நாயகமே!



இன்னிசைப் பாமாலை 39




<poem>நிதிவைத்த வேட்கையொடு
நித்ததித்தம் நெஞ்சுருகிப்
பதிவைத்த வையமெலாம்
பாய்ந்தலைத்து வாடாமல்
துதிவைத்த நுஞ்சமுகஞ்
சூழ்ந்திருந்து வாழுமொரு
கதிவைத்த லாகாதோ
கல்வத்து நாயகமே!

எண்ணுவது மெண்ணியமுற்
றீகுதலு மின்னலறப்
பண்ணுதலும் பாடுதலும்
பண்புபெறப் பாவியுளம்
நண்ணுதலு முண்மைநிலை
நாடுதலும் ஞானவெளிக்
கண்ணுதலும் நீரானீர்
கல்வத்து நாயகமே!

மாலூருங் கோட்டூரும்
வாய்ந்தகடைக் காவூரும்
மேலூருங் கீழூரு
மெல்லியர்பால் வேட்பேனோ
சேலூரும் பண்ணைவராற்
சென்றுடைத்த முக்கனித்தேன்:
காலூருஞ் செம்பிநகர்
கல்வத்து நாயகமே!