பக்கம்:கல்வத்து நாயகம் (கவிதைகள்).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

கல்வத்து நாயகம்

வண்டிருந்த பூவென்ன
வந்துவந்தும் பொன்னடிக்கே
தொண்டிருந்த வேழைநெஞ்சஞ்
சோர்விருக்கத் தூயவுடற்
கொண்டிருந்த துன்பமுற்றுங்
கூர்ந்துறுத்தி நின்றதையோ
கண்டிருந்துங் காவீரோ
கல்வத்து நாயகமே !


பொய்யாளு மாதரிடு
போகவலைக் குள்ளாகி
மையாளும் வஞ்சநெஞ்ச
வன்கனனாய் நில்லாமன்
மெய்யாளு நூதனவி
வேகியென வாய்த்தநுந்தங்
கையாளு மாகேனோ
கல்வத்து நாயகமே !


முத்துதற்கோ நும்மடியின்
மொய்ப்பதற்கோ முற்றுமுமை
நத்துதற்கோ நாடுதற்கோ
நண்ணிநின்றார் பல்கோடி
பொத்துதற்கோ வாய்மூடிப்
போற்றுதற்கோ போந்தவெனைக்
கத்துதற்கோ விட்டீரென்
கல்வத்து நாயகமே !

இன்னிசைப் பாமாலை

41

பொய்யாத நும்மடியார்
புண்ணியமே செய்துசெய்துங்
கொய்யாத தாண்மலர்க்கே
கூர்ந்துநின்றா ரையோதான்
செய்யாத தீவினையே
செய்துசெய்து தீநெறிக்கண்
கையாத வாறுழன்றேன்
கல்வத்து நாயகமே!


படுகளவும் பொய்புலையும்
பாழ்ம்பழியுங் கோள்கொலையும்
நெடுகளவும் பற்றிநின்ற
நீசர்பெறா நின்மலர்த்தாள்
முடுகளவும் பார்த்திருந்து
முடனெனை யுட்கனிந்து
கடுகளவும் காக்ககிலீர்
கல்வத்து நாயகமே !


வஞ்சமலர் நெஞ்சமொடு
வல்வழக்கும் பொய்யுரை
விஞ்சமலர் வாய்கொண்டு
விண்டுரைத்தேன் வெய்
குஞ்சமலர் நுங்குடைக்கீழ்
கூர்ந்திருந்து நேர்ந்தப;
கஞ்சமலர் கொள்வேனோ
கல்வத்து நாயகமே !