பக்கம்:கல்வத்து நாயகம் (கவிதைகள்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



42

கல்வத்து நாயகம்

மருத்துவந்து நோயகற்று
வார்போலுந் தாட்கமலம்
பெருத்துவந்து தீதகற்றிப்
பேறுபெற்றார் பல்கோடி
திருத்துவந்த வத்துறைக்கே
சிந்தைசெலுத் தாதலுத்தேன்
 கருத்துவந்து காப்பீரெங்
கல்வத்து நாயகமே !

நிலங்கரைவி யாபார
நீநிதிய முற்றுமுற்றும்
புலங்கரைவி யாவெளிய
புல்லனுக்கு மாக்கமுண்டோ
மலங்கரைவி வேகமிலா
வம்பர்பவ வாருதிக்கோர்
கலங்கரைவி ளக்கமொத்த
கல்வத்து நாயகமே!

உள்ளலம்பு மாசைமுற்று
முற்றுவந்து நும்மடிக்கே
கொள்ளலம்ப வைத்தவென்னைக்
கூர்ந்தெழுந்து காருமையா
புள்ளலம்புந் தண்டலைசூழ்
பொற்கமல வாவியெலாங்
கள்ளலம்புங் கீழைநகர்
கல்வத்து நாயகமே !


இன்னிசைப் பாமாலை

43


மெய்ம்மாறு பொய்மனத்தார்
வேட்கைவலைக் குள்ளாகிச்
செய்ம்மாறு கண்டறியாத்
தீயனெனை யாள்வீரே
உய்ம்மாறு சீவரெலா
முற்றெழுந்து பெய்ம்முகிற்கோர்
 கைம்மாறு காண்பதுண்டோ
கல்வத்து நாயகமே !

உள்ளமனஞ் சுத்தநிலை
யுற்றிருப்ப யுத்தமர்தா
மெள்ள மனம் விட்டீர்க்கும்
வேசியர்க்கா ளாவாரோ
பள்ளமனப் பாய்புனல்போற்
பற்றகலாப் பாவிபெற்ற
கள்ளமனந் துள்ளுதையோ
கல்வத்து நாயகமே!

துளிப்பருத்து நெய்க்கூந்தற்
றோகைநல்லார்,சொற்சுவைக்கே
இனிப்பருத்து நெஞ்சினனா
யீடழிந்து வாடாமற்,
புளிப்பருத்து மஞ்ஞானப்
போக்கொழித்துப் பொங்குசுகக்
களிப்பருத்து மாறருள்வீர்
கல்வத்து நாயகமே !