பக்கம்:கல்வத்து நாயகம் (கவிதைகள்).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

கல்வத்து நாயகம்

பூவிருந்த வாசமெனப்
       பூதலத்து மீதலத்து
மேவிருந்த நாதனருண்
       மேன்மைமிகு மேலோராய்த்
துாவிருந்த முத்தர்குலச்
       சுத்தபர தத்துவரே
காவிருந்த கீழைநகர்
       கல்வத்து நாயகமே!

கேடுமுறித் தற்பகலுங்
       கீழ்மைதரு மேழமையாம்
பாடுமுறித் துற்றமலப்
       பற்றுமுறித் தாளிரோ
வாடுமுறித் தோங்குசித்தீக்
       மாமரபில் வந்தபெருங்
காடுமுறித் தார்குலத்தீர்
       கல்வத்து நாயகமே!


ஆரணமும் பல்கலையு
       மாய்ந்துரைத்த வான்மீக
பூரணமெய் ஞானதவப்
       போதனைக ளத்தனையுஞ்
சீரணமுன் றேர்ந்துணர்ந்த
       செல்வருமச் செல்வர்தரு
காரணமு நானென்றீர்
       கல்வத்து நாயகமே!


இன்னிசைப் பாமாலை
15

ஆட்டிவைத்த பம்பரம்போ
லல்லலுழந் தற்பகலுங்
கோட்டிவைத்த வையமுற்றுங்
கூர்ந்துவப்ப நேர்ந்தறிஞர்
திட்டிவைத்த பல்கலையிற்
செய்தொழிலில் வாய்மொழியிற்
காட்டிவைத்த பொக்கிஷமே
கல்வத்து நாயகமே!

சத்திருந்த ஞான கலை
சாத்திரங்கள் யாவுமுமை
யொத்திருந்து தேடிமிக
வோலமிடு முத்தமரே!
பித்திருந்த யேழையனப்
பின்னலறுத் துன்னுமுன்னம
கத்திருந்த வந்தருள் வீர்
கல்வத்து நாயகமே!

மட்டற்ற செல்வமொடு
       மக்கள்மனை சுற்றமெலா
முட்டற்ற வாழ்க்கைமிக
       முன்னிருந்தும் பின்னொருவ
விட்டற்ற மோக்கநிலை
       மேவுதுற வேய்ந்துமனக்
கட்டற்ற நீர்மைகொண்டீர்
       கல்வத்து நாயகமே!