பக்கம்:கல்வத்து நாயகம் (கவிதைகள்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

கல்வத்து நாயகம்

வானாடும் பூநாடு
மற்றனவுந் தானாட
நானாடு நும்மருட்டேன்
நாயேனுண் டுய்யேனோ
ஊனாடு மாந்தரெலா
முண்ணாட முன்னாடுங்
கானாடும் பூம்பதத்தீர்
கல்வத்து நாயகமே!

பேணுவது நும்மருளே
பேசுவது நுந்நாமம்
பூணுவது நும்மலர்த்தாள்
போற்றுவது நும்புகழே
நாணுவது நும்மறதி
நண்ணுவது நுஞ்சமுகம்
காணுவது நுங்காட்சி
கல்வத்து நாயகமே!

என்னாசை யொன்றுளதே
தின்பமிகு செம்பொனடி
தன்னாசை யன்றியுறுந்
தண்ணருட்கீழ் வாழ்வதுவே
பின்னாசை யேதுமிலைப்
பேதுருத்தித் தீதருத்துங்
கன்னாசை நீத்தருள்வீர்
கல்வத்து நாயகமே!

இன்னிசைப் பாமாலை

17


ஆட்சிதரும் புந்திமன
மாக்கையிந்தி யங்களெலாம்
நீட்சிதரு நுண்ணறிவால்
நேர்ந்தொழித்தென் முன்பணிபோன்
மாட்சிதரு தீனானா
மாற்றமறுத் தைக்கியமெய்க்
காட்சிதருங் கண்ணுதலெங்’
கல்வத்து நாயகமே!

மானாரும் பெற்றுவந்த
மக்களொடு சுற்றமென
ஆனாரு தம்முயிர்க்கிங்
காயதுணை யாவாரோ
தானாருஞ் சீவமுத்த
தத்துவருஞ் சாற்றவல்ல
கானாரும் பூங்குழலீர்
கல்வத்து நாயமே!

முட்குடியை நச்சுணவை
முந்நீரை யுற்றருந்த
மட்குடிக ளெண்ணாத
வாறென்னை நண்ணீரோ
உட்குடியா வீற்றிருந்தென்
னுச்சிகனிந் தூறிவருங்
கட்குடியைக் காட்டுமெங்கள்
கல்வத்து நாயகமே!