பக்கம்:கல்வத்து நாயகம் (கவிதைகள்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

கல்வத்து நாயகம்

பொய்கண்ட துண்ணிடையார்
பூட்டுமைய லார்கலியுள்
நொய்கண்ட நாயேனும்
நொந்தழுந்தி மூழ்குவனோ
எய்கண்ட மாந்தருளத்
தின்னறவிர்த் தின்பநல்குவ
கைகண்ட மாமருந்தே
கல்வத்து நாயகமே!

மண்ணாடிப் பெண்ணாடி
மாநிதியத் தானாடிப்
புண்ணாடி நின்றநெஞ்சப்
புல்லனையு மாளீரோ
உண்ணாடி வந்தவெலா
முற்றுணர்ந்து மற்றுரைத்துங்
கண்ணாடி யானீரென்
கல்வத்து நாயகமே;

பண்ணூறு மென்மொழியார்
பார்வைவலைக் குள்ளாகிப்
புண்ணூறு நெஞ்சினனாய்ப்
புத்திகெட்டுப் போகாமற்
றண்ணூறு நுங்கருணைச்
சாகர்த்துண் மூழ்கவென்றன்
 கண்ணூறு தீர்த்தருள்வீர்
கல்வத்து நாயகமே!

இன்னிசைப் பாமாலை

9

வேல்பிடித்த கண்மடவார்
வெய்யமையற் காட்டகத்தே
மால்பிடித்த யானையென
மாழாந்து நில்லாமற்
கோல்பிடித்த கையுடைய
கொற்றவருங் காணபருதுங்
கால்பிடித்தேன் கண்ணில்வைத்தேன்
கல்வத்து நாயகமே!

கொக்கிவிட்ட சங்கிலிபோற்
கூண்டெழுந்து நும்மடியார்
சொக்கிவிட்ட நல்லருட்கே
தோய்ந்துநின்றா ரையோதா
னுக்கிவிட்ட நெஞ்சினனா
யுள்ளுடைந்து மெய்ம்மயங்கிக்
கக்கிவிட்ட தம்பொலத்தேன்
கல்வத்து நாயகமே!

ஆணவத்தை மற்றிரண்டை
யாங்கறுத்து, வென்றுபல
பூணவத்தைப் பூண்டுநின்ற
புண்ணியர்க்கா ளாகாமல்
வீணவத்தை கொண்டெழுந்திம்
மேதினியெ லாமலைந்தேன்
காணவத்தைக் காட்டுமெங்கள்
கல்வத்து நாயகமே!