கல்விச் செல்வம்
29
திரிகடுகம்
கற்றாரைக் கைவிட்டு வாழ்வதும், காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் - முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்உலகம் சேரா தவர்.
ஏலாதி
இடைவணப்பும், தோள்வனப்பும், சடின்வனப்பும் நடைவனப்பும், நாணின். வனப்பும், - புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல; எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு.
அறுவர்தம் நூலும் அறிந்துணர்வு பற்றி
மறுவரவு மாறாய நீக்கி - மறுவரவில்
மாசாரியனாய் மறுதலைச்சொல் மாற்றுதலே
ஆசா ரியனது அமைவு.
எழுத்தறியத் தீரும் இழிதகைமை; தீர்ந்தால்
மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும்:-மொழித்
முட்டறுத்த நல்லோன் முதல்நூல் பொருளுணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்
அறநெறிச்சாரம்
தேசும் திறனறிந்த திட்பமும், தேர்ந்துணர்ந்து
மாசு மனத்தகத்து இல்லாமை- ஆசின்றிக்
கற்றல் கடனறிதல் கற்றார் இனத்தராய்
நிற்றல் வரைத்தே நெறி!
எப்பிறப்பாயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கள் பிறப்பில் பிறிதில்லை-அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்.