பக்கம்:கல்வி உளவியல்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 கல்வி உளவியல் அளவிலோ மூளை மாருவிடினும், அமைப்பில் மாறுதல் அடைகின்றது. எண்டோகிரீன் சுரப்பிகள் வேகமாக வேலை செய்யத் தொடங்கி ஆண், பெண் தன்மைகளின் வளர்ச்சிக்கு ஏற்றனவாயுதவுகின்றன. சிறுவனுக்கு மீசை அரும்புகின்றது. சிறுமிக்கு இடைக் கீழ்பகுதி விரிவடைகின்றது; பூப்பும்.அடைகின் ருள். சுருக்கமாகக் கூறினல் ஆண்களும் பெண்களும் பக்குவ நிலையை எய்துகின்றனர். காலம், பால் (Sex), தட்ப வெப்ப நிலை, இனம், வாழ்க்கைச் சூழ்நிலை, பகுத்தறிவு முதலிய பல பகுதிகளைச் சார்ந்து இங்கில ஏற்படுகின்றது. பெரும்பாலும் ஆண்பிள்ளைகளைவிடப் பெண் பிள்ளைகளிடையே ஏறக்குறைய இரண்டாண்டுகட்கு முன்னராகவும் திட்ட மாகவும் இப்பருவம் தோன்றுகின்றது. சாதாரணமாக நம் நாட்டில் பெண் பிள்ளைகளிடம் 12-ஆம் வயதிலும் ஆண்பிள்ளைகளிடம் 14-ஆம் வயதிலும் இங்கில தோன்றுகிறது எனலாம். அறிவு வளர்ச்சியும் செயல்களும் : இவை இப்பருவத்தில் புதியன வாக ஏற்படுவதில்லை. சிந்தித்தல், சங்கற்பித்தல், கற்பனை செய்தல், கவனித்தல், நினைவுக்குக் கொண்டு வருதல் போன்ற திறன்கள் தொடக் கத்திலிருந்தே காணப்பெறுகின்றன. ஆயினும், இப் பருவத்தில் அவை விர்ைவாகத் தொழில் புரிகின்றன. காரண காரியம் காணும் திறனும் நன்கு வளர்கின்றது. ஆகவே, புலனுணர்ச்சிகளினல் கருத்தை யுணர் வதிலும் சிந்திப்பதிலும் திறமை மிகுதியாகத் தோன்றும். வெற்றுணர்வுத் திறன் அதிகரிக்கின்றது. செவ்வையாகச் சிந்தித்துச் செயல்களில் தோன்றும் பயன்களை எண்ணி நடத்தையை மேற்கொள்வதில் கூர்த்த மதி காணப்பெறலாம். விளையாட்டுக்களிலும் புத்தகங்கள் படிப்பதிலும் மனம் மிகுதியாக ஈடுபடும். கற்பனையாற்றலும் பெருகித் தோன்றும். பகற் கனவுகள் தோன்றலாம்; பொறுப்பை ஏற்கும் மனப்பாங்கும் உண் டாகும். சமூகப் பிரச்சினைகளில் மனம் செல்லும். முதிர்ந்தோர் செயல் களில் ஊக்கம் காட்டும் கிலே தோன்றும். எதிர்காலத்தில் தாம் மேற். கொள்ளவிருக்கும் தொழில்களிலும் மன ஆக்கத்தை வெளிப்படுத்துவர். இப் பருவத்தில் இளைஞர்கள் உண்மைக் கதைகளையும் துணிகரச் செயல்களைக் கூறும் நூல்களையும் விரும்புவர். புதியன படைத்தல், அறி வியல் இவற்றில் ஊக்கம் காட்டுவர். வரலாறு, வாழ்க்கை வரலாறு, பிரயாண நூல்கள் இவற்றிலும் விருப்பம் உண்டாகும். பெண்பிள்ளைகள் சிறிது வேறுபட்ட வகையில் செய்யுள், நாடகம், புதினம் இவற்றில் விருப்பத்தைச் செலுத்துவர். சில நாட்களில் இருதிறத்தாரும் வாழ்க்கை முழுதும் சுவைதரும் ஒரேவகையான இலக்கியத்தில் நாட்டம் செலுத்து வர். எனவே, இப் பருவத்தில் இவர்களுக்கு நல்ல வழிகாட்டி, எக்காலத்திற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/133&oldid=777777" இலிருந்து மீள்விக்கப்பட்டது