பக்கம்:கல்வி உளவியல்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 கல்வி உளவியல் இம்முறையில் இயற்றிகிலையில் செய்தற்கூறு சுவைகாணலில் இன்றி யமையாததாகின்றது. உள்ளக்கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் உள்ளக்கிளர்ச்சிகளே நமக்கு ஆற்றல் அளிக்கும் விசைகள் என் பதை மேலே கண்டோம். உள்ளக்கிளர்ச்சிகளைத் தக்க முறையில் கட்டுப்படுத்திச் செயலை எழுப்பி, நிறுத்தி, நெறிப்படுத்துவதே நாகரிக முறையாகும். ஓரளவு கல்வி பெற்றவர்கள் உள்ளக்கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி கன்முறையில் நடந்து கொள்வார்கள் என்று பாமரர்களும் எதிர்பார்க்கின்றனர். தக்க காரணமின்றியே சினத்துடன் வெகுண்டு எழுவதும், அல்லது அச்சத்துடன் வெருண்டோடுவதும், சிறு புகழ்ச்சி யால் இறுமாப்பு அடைவதும், எல்லா கிலைகளிலும் களிப்புக் கடலில் மூழ்குவதும், சிறு இடர்ப்பாடுகள் நேரிடினும் உளச்சோர்வு கொள்ளுதலும், விபத்து நேரிடா திருக்கும்பொழுதே விபத்து நேரிடப் போவதாகத் திகி லடைவதும் தன்னடக்கமில்லாத பண்பினைக் காட்டுகின்றன. ஒருவாறு உள்ளக்கிளர்ச்சிகளை அடக்குவதும் மறைப்பதும் சிறந்த நல்லொழுக்கத் தின் அறிகுறிகளாகும். தன்னடக்கத்தில் தனியாள்களிடம் வேற்றுமைகள் காணப்பெறுகின் றன. சிலர் வாழ்க்கையில் நேரிடும் உயர்வுகளையோ வீழ்ச்சிகளையோ கண்டு அதிர்ச்சியடையாமல் அமைதியாக உள்ளனர். அவர்கள்தாம் அறிவுள்ள மக்கள் சிந்தனையுடன் செயற்படுபவர்கள். அவர்கள் தன் முனைப்பால் எதிர்ப்பையும் கொள்வதில்லை; சிறு நிகழ்ச்சிகளால் கொங் தளிப்பையும் அடைவதில்லை. அவர்களிடம் உள்ளக்கிளர்ச்சிகள் மட்டுப் படுத்தப் பெறுகின்றன. மற்றும் சிலர் சிடுசிடுத்த முகத்துடனும், கடு கடுத்த சொற்களை வீசுபவர்களாகவும் இருப்பதைக் காண்கின்ருேம். எந்தச் சிறு நிகழ்ச்சியும் அவர்களை நிலைகலக்கித் தடுமாறச் செய்துவிடும். இந்த இருசாராருக்கும் இடைப்பட்ட பல்வேறு கிலேயிலுள்ள உள்ளக் கிளர்ச்சிகளைக் கொண்டவர்களும் உள்ளனர். இவர்களைத் தவிர, ஒவ்வொரு சிறு நிகழ்ச்சிக்கும் யோசனை கோராததால் அவமானம் அடைவோரும், எந்த விதமான அவமானத்திற்கும் கடிந்து கொள் வதற்கும் அசையாத உள்ளத்தினரும் உளர். உள்ளக்கிளர்ச்சிகளை அடக்கியாள்வதுதான் நாகரிகத்தின் சின்னம். தன்னடக்கம் என்பது தன்னை நெறிப்படுத்திக் கொள்வதாகும். ** asias s-a - doing eiềment.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/206&oldid=777937" இலிருந்து மீள்விக்கப்பட்டது