பக்கம்:கல்வி உளவியல்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்பு பிறழ்ந்த நடத்தை 337 களைப்பற்றி அதிகமாகக் கவலைப்படுவர். நோய்வாய்ப் பட்டவர்களிடம் நோய் நீங்கின. பிறகும் சில பிரச்சினைகள் எழுகின்றன. குழந்தைகள் குணமடைந்துவிட்டனர் என்று பெற்ருேரை நம்பவைத்தல் கடினம். நோய் நீங்கின. பிறகும் இவர்கள் விளையாட்டுக்களிலும் பிற சமூகச் செயல்களிலும் ஈடுபடாமல் விலகியிருப்பர். இவர்களை ஆசிரியர்கள் தக்க முறையில் கவனித்து ஏற்ற வேலைகளில் ஈடுபடுத்திப் பொருத்தப்பா டடையச் செய்தல் வேண்டும். புலக்குறைபா டுடையவர்கள் : சாதாரணமாக நாம் சில குழவிக ளிடம் பார்வைக் குறைகளும் கேள்விக் குறைகளும் இருப்பதைக் காண்கின் ளுேம். பார்வைக் குறைபாடுகளுள் பெரும்பான்மையாகக் காணப்படு பவை தூரப்பார்வை, கிட்டப்பார்வை என்பவை. இவை இரண்டினுள் ஆளுமை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியது துரப்பார்வையே. காரணம், பாடவேலைகளிலும் விளையாட்டுக்களிலும் பிற்போக்குடைமையால் ஏற்படும் தாழ்வுணர்ச்சியைத் தவிர, இவர்கள் தலைவலியினலும் ஒருவித வெறுப்புணர்ச்சியாலும் அதிகமாகத் துன்புறுகின்றனர். இதல்ை பள்ளி வேலைகளில் இவர்கள் தக்கமுறையில் பொருத்தப்பாடடைய முடியாமல் போகின்றது. குழவிகளிடம் சிலசமயம் பிறருக்கு எளிதில் புலகைாத செவிமந்தம் ஏற்பட்டிருக்கும். இவர்களும் படிப்பிலும், விளையாட்டிலும், பிற செயல் களிலும் பின் தங்குகின்றனர். இவர்கள் கவனக் குறைவும், மந்தமதியும் உள்ளவர்கள்போல் பிறர் கண்ணுக்குத் தோற்றமளிப்பர். மந்தச்செவி யினர்; பொதுவாக காணப்படுபவர்களாகவும், ஒதுங்கும் பண்புடையவர்க ளாகவும் காணப்பெறுவர். இந்த இரண்டு வகைக் குறைபாடுடையவர்கள் பல துறைகளிலும் பிற்போக்கு கிலேயில் இருப்பதன் காரணமாக, இவர்களிடம் தாழ்வுமனப் பான்மை காணப்பெறும். இவர்கள், தாம் பள்ளியைவிட்டு வெளியேறிஞல் கலம் பயக்கும் என்றும் கருதுவர். இவர்கள், உடன் பயில்வோர்களால் கவனமற்றவர்களாகவும், அசடுகளாகவும் கருதப்பெறுவர். இக்குறை யுள்ளவர்களிடம் ஆசிரியர் தனிக்கவனம் செலுத்தி அவர்களிடமுள்ள குறைகளைச் சமாளிக்கத்தக்க ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். உடற குறைபற்றிய பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டுமாயின், ஆசிரியர், பெற் ருேர், மருத்துவர் ஆகிய மூவருடைய ஒத்துழைப்பும் வேண்டும். க.உ.22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/359&oldid=778280" இலிருந்து மீள்விக்கப்பட்டது