பக்கம்:கல்வி உளவியல்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 கல்வி உளவியல் சராசரிக்கு மேலாக இருந்த பையன் இப்பொழுது வகுப்புச் சராசரிக்குக் கீழாக இருக்கிருன் என்கிற சரியான தீர்மானத்திற்கு வர இயலும். பள்ளியிலிருந்து தரப்பெறும் அறிக்கையில் மாணக்கன் பள்ளிக்கு வந்த நாட்களின் எண்ணிக்கை, கடத்தை, படைப்பாற்றல், கைத்திறன், கையெழுத்து, தூய்மை, காலம் தாழ்த்தாமை, சமூகப்பண்பு, தான் தொடங்காற்றல் அல்லது தான்-முனைவு (initiative), விளையாட்டில் காட்டும் உற்சாகம் போன்ற கூறுகள் இடம் பெறுதல் வேண்டும். திங்க ளுக்கு ஒரு முறை அல்லது மூன்று திங்களுக்கொரு முறை இத்தகைய அறிக்கைகளைப் பெற்றேர்களுக்கனுப்பி அவர்களுடைய கையொப்பம் பெற்றுத் திரும்பவும் வாங்கி வைக்கவேண்டும். அறிக்கையின் வடி வத்தைவிட அதை அனுப்பும் நல்லெண்ணமே மிகவும் இன்றியமை யாதது. இந்த அறிக்கையில் ஆசிரியர் எழுதும் குறிப்புத்தான் மிகவும் முக்கியமானது. சிலசமயம் ஆசிரியரின் குறிப்பு உறவினை வளர்ப் பதற்குப் பதிலாகப் பகைமையினை வளர்த்தல் கூடும். எனவே, இக்குறிப் பின எழுதுங்கால் ஆசிரியர் பொறுப்பினை உணர்ந்து எழுதுதல் வேண்டும். சில சமயம் இத்தகைய அறிக்கையுடன் தனிக் கடிதமும் எழுதுதல் சிறப்பாக அமையும். மாளுக்கர் தேர்ச்சியில் குறைவோ, நடத்தையில் இழுக்கோ நேரிடும்பொழுது எழுதக்கூடிய கடிதங்களை கன்முறையில் மெருகேற்றி எழுதுதல் வேண்டும். கடிதம் எழுதுதல் ஒரு தனிக் கலை. கடிதம் சிறப்புற அமைய வேண்டுமாயின், ஆசிரியருக்குத் தக்க பயிற்சி யும் பழக்கமும் வேண்டும். இம்முறையால் பெற்ருேர்களின் ஒத்துழைப்பும் கிட்டும். மாளுக்கர் களின் தேர்ச்சியில் வளர்ச்சியும் ஏற்படும். ஆசிரியர்-பெற்றேர் உறவும் வளரும். பெற்றேர்கட்குப் பள்ளிகளின்மீது ஒர் அக்கறை பிறக்கும்; அவர்கட்குப் பளளிகளின்மீது நம்பிக்கையும் விருப்பமும் ஏற்படும். பள்ளிகளும் முன்னேற்றம் அடையும்; தற்காலத்தில் பள்ளிகளில் காணப் பெறும் தேக்கமும் கணிசமான அளவில் குறையவும் கூடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/420&oldid=778414" இலிருந்து மீள்விக்கப்பட்டது