பக்கம்:கல்வி உளவியல்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் 401 அஹிம்சை, பஞ்சசீலம், சமதருமம், பணிவு முதலியவை பேசப் பெறுகின்றன. இத்தகைய முரண்பாடுகள் முதிர்ந்தோர் அனைவரை யும் பாதிக்கின்றன. ஆசிரியர் முதிர்ந்தோருள் ஒருவர் அல்லவா? மேற்கூறியவாறு உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசும் சமூகச் சூழ்நிலையில் ஆசிரியருக்குப் பொருத்தப்பாடும் மனநலமும் எங்ங்ணம் அமைதல் கூடும் ? மேலும், வாழ்க்கை நிலையை உயர்த்த வேண்டும் என்றும், அடிப் படைத் தேவைகள் எல்லோருக்கும் கிடைக்கச் செய்தல் வேண்டும் என்றும் பொது மேடைகளிலும், செய்தித்தாள்களிலும், நூல்களிலும் முழங்கப் பெறுகின்றன. ஆளுல், உண்மை வாழ்க்கையில் இத்துறை களில் ஏமாற்றங்களே காணப்பெறுகின்றன. அதிலும், ஆசிரியர்கள் விஷயத்தில் திரும்பின பக்கமெல்லாம் ஏமாற்றங்கள்; இடர்ப்பாடுகள். காம் ஒன்றை எதிர்ப்பார்க்கின்ருேம்; அது கிறைவேறுவதில்லை; வேறென்று நிகழ்ந்து விடுகின்றது; கிறைவேறுகின்றது. இத்தகைய ஏமாற்றமுள்ள சூழ்நிலையில் மனநலம் அமைவதற்குச் சாத்தியமுண்டா? எங்கும் விடுதலை, விடுதலை’ என்று பறைசாற்றப்பெறுகின்றது. ஆளுல், உண்மையில் அடிமை மனப்பான்மையே வளமாக வளர்கின்றது; கொடுமையான கிர்ப்பந்தங்களே எம்மருங்கும் தாண்டவ மாடுகின்றன. அதிலும், ஆசிரியர்கள் விஷயத்தில் அனைத்திற்கும் பூட்டுக்கள் போடப் பெறுகின்றன. ஒன்றையும் அவர்கள் சுயமாகச் செய்ய முடியாது. அனைத்திலும் பிறர் தலையீடு நுழைந்து விடுகின்றது. இவ்வுலகில் நமக்கு விருப்பமுள்ளவைகளைப் படிக்க முடிகிறதில்லை; நாம் விரும்பும் தொழிலும் நமக்குக் கிடைப்பதில்லை. நம் விருப்பப்படிக் குழந்தைகட்குக் கற்பிக்க வும் முடிகின்றதில்லை. இதில் எத்தனையோ குறுக்கீடுகள், தடைகள் நிகழ்ந்துவிடுகின்றன; இந்நிலையில் விடுதலை’ எங்குள்ளது? கொள்கை முறையில் சமூக சமத்துவம் வேண்டுமென்கிருேம்; பெருந்தலைவர்கள் இதைப்பற்றி முழங்கிய வண்ணமிருக்கின்றனர். நடை முறையில் இன்னும் பலர் பல துறைகளில்-சமூகம், பொருளாதாரம், கல்வி போன்றவற்றில்-தாழ்த்தப்பட்டவர்களாகவே காட்சியளிக் கின்றனர். சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்* என்ற வள்ளுவப் பெருமானின் பொய்யாமொழியை எண்ணி எண்ணி 4 குறள்-664. க.உ.26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/423&oldid=778419" இலிருந்து மீள்விக்கப்பட்டது