பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

கல்வி உளவியல் கோட்பாடுகள்


ஒரு சில உள்ளக்கிளர்ச்சிகளைச் சற்று விரிவாக ஆராய் Garrio.

வெகுளி : வெகுளி என்பது ஏதேனும் ஒரு தடைதோன்றி நம் செயலைச் சிதைக்கும்போது எதிரூன்றலாக எழும் ஓர் உள்ளக் கிளர்ச்சியாகும். அது தனித்தோ மற்றவற்றுடன் சேர்ந்தோ தோன்றுகின்றது. பொறாமை, துக்கம் முதலிய நிலைகளில் வெகுளி ஒரு கூறாகவும் அமைந்துள்ளது. தடை மிக்கு வருமாயின், வெகுளியே அச்சமாக மாறுவதும் உண்டு, துணி கட்டுதல், உடையணிதல், உடைகழற்றல், குளித்தல், உறங்கப் போதல் என்ற பலவகைச் செயல்களிடையேயும் பிறர் வந்து இடை புகுந்தால், சிவவழிபாட்டில் கரடி புகுந்ததாகக் கருதிக் குழவி வெகுண்டு வீழ்கின்றது

வெகுளியின் வடிவம் : குழவியிடம் வெகுளி தோன்றும் வடிவினையும் நாம் அறிவோம். மேலும் மேலும் குதிப்பது, உதைத்துக் கொள்வது, தரையைக் காலால் தட்டுவது, தரையில் வீழ்ந்து புரள்வது, ஒன்றும் செய்யாமல் விறைத்து நிற்பது, உண்ண வாய் திறவாது இறுக மூடிக்கொள்வது, பேச்சு கற்றுக் கொண்டபோது மறுத்துரையாடுவது, குள் உரைப்பது, வைவது-இவ்வாறெல்லாம் குழந்தையிடம் வெகுளி வெளிப் படக் காண்கின்றோம்.

இந்தச் சிக்கலற்ற நிலையிலிருந்து பல சிக்கலான நிலைகள் ஏற்படுகின்றன. நடந்து செல்லும்பொழுது முள், கல், கண்ணாடி போன்ற ஊறு விளைவிக்கும் பொருள்களிருப்பின் எரிச்சல் உண்டாகின்றது. நாளடைவில் உண்மைத் தடைகளுடன், தடையாகத் தோன்றுபவையனைத்தும் சினத்தை[1] எழுப்பிவிடும். தான் போடும் திட்டத்திற்கு ஊறுவிளைந்தாலும், தன் புகழ், தன் விருப்பம் ஆகியவற்றிற்கு இடைஞ்சல் ஏற்படினும் கோபம் உண்டாகும். பள்ளியில் ஆற்றலுக்கு மீறிய வேலை தரப் பெறினும், வேலையை நெடுநேரம் செய்ய நேரிடினும், ஆசிரியர் ஒருதலைச் சார்பாக நடப்பதாகத் தோன்றினும், அவர் முரணான கட்டளையிடினும் அல்லது பிறருடன் ஒப்பிட்டு ஏளனம் செய்தாலும் அல்லது குறைகூறினாலும், கிண்டலாகப் பசினாலும் குழந்தைகள் சினம் கொள்வர்.

முற்றும், சில குழந்தைகள் பள்ளிக்குவந்த பின்னர் இரகசியம் பேசுவர்; இரைச்சல் போடுவர்; குறும்பு செய்வர்; பள்ளிக்கு வராமல் ஒளிந்து திரிவர்: கோள்சொல்வர், கற்பனையாற்றல் வளர்ந்து விட்டால் பல முறைகளில் பழிக்குப் பழிவாங்கும்


  1. சினம், வெகுளி-Anger.