பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊக்குநிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும்

183


விட்டு விடுதல்போல் செய்தல், தாங்கல் நீங்குதல் (Loss of support) முதலியவைகள் அச்சத்தைத் தூண்டுபவை, இவற்றிலும் குழந்தைகளுக்கிடையே தனி வேற்றுமை உண்டு. ஒரே குழந்தை வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு முறையாகத் துவங்கலாம்.

பல பருவ நிலைகளில் அச்சம் : குழந்தையின் இயக்கங்களும் பட்டறிவும் மிகமிக அச்சத்தை விளைவிக்கும் பொருள்களும் நிகழ்ச்சிகளும் மாறுபாடு அடைகின்றன. முதலில் அச்சம் விளைவிக்காதவை பின்னர் அச்சமுறுத்துகின்றன; முன்னர் பயமுறுத்தியவை பின்னர் பயமுறுத்துவதில்லை. இருட்டு, விலங்குகள், மருத்துவர், குடுகுடுப்பாண்டி, பாம்பு போன்றவை சிறுவர்கட்கு அச்சத்தை விளைவிக்கின்றன. ஐந்து யாண்டு முடிவதற்குள் இவை மறைகின்றன. ஆறாம் யாண்டில் புது வகையான அச்சம் ஒன்று தோன்றுகிறது. இல்லாத பொருள்களும், கற்பனைகளும் அச்சமூட்டத் தொடங்குகின்றன. இருட்டில் போவதென்றால் அச்சம், பேய் என்றால் அச்சம், இன்னும் எத்தனையோ வகையான அச்சங்கள் எழுகின்றன.

குமரப் பருவம் எய்தும்பொழுதும் தொழிலில் அமர்ந்த பிறகும் வெவ்வேறு அச்சங்கள் தோன்றுகின்றன. முதலில் பருப் பொருள்கள் பயமுறுத்துகின்றன; நாளடைவில் அறிவும் கற்பனையாற்றலும் வளர வளர, எதிர்கால நிகழ்ச்சிகளே அதிகமாகப் பயத்திற்குக் காரணங்களாகின்றன. (எ.டு) உத்தியோகத்தை இழத்தல், மதிப்பை இழத்தல், திருடர்கள் கொள்ளையடித்தல், மேல் வகுப்புக்கு மாற்றம் இல்லாது போதல்-என்பவை போன்றவை. இப் பருவத்தில் பால் வேட்கையைச் சேர்ந்த புதிய அச்ச நிலைகளும் தோன்றலாம். வயது ஏற ஏற, இயற்கைக்கு அப்பாற்பட்ட நரகம், பூதம், பைசாசம் முதலியவற்றைப் பற்றிய அச்சமே வளர்ந்து கொண்டு வருகின்றது. .

அச்சத்தை வலுப்படுத்தும் கூறுகள் : சில நிகழ்ச்சிகள் அச்சத்தை வலுப்படுத்துகின்றன. சிவகாசி வெடிகளினால் ஒரு தடவை உண்டான விபத்து, அவ் வெடிகளைக் காணும் பொழுதெல்லாம் திகிவை உண்டாக்குகின்றது. பெற்றோர்கள் பயங்கொள்வதை அறியும் குழந்தைகளிடம் அச்சம் உறைப்பாக வேரூன்றுகின்றது. ஓர் ஆய்வாளர் தாய்மாரின் அச்சங்களையும் அவர்களது குழவிகளின் அச்சங்களையும் கணக்கிட்டுப் பார்த்தபோது அச்சம் மிக்க தாய்மாரின் குழவிகளே பெரிதும் அச்சமுடையனவாகக் கண்டாராம். சில சமயம் பெற்றோர்கள்