பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

கல்வி உளவியல் கோட்பாடுகள்


தண்டனை விதித்தல் போன்றவை மாணாக்கர்களிடம் இயல்பி கந்த நடத்தை ஏற்படுவதற்குக் காரணமாகின்றன. ஆசிரியர்கள் இவற்றை அறவே நீக்குதல் வேண்டும், எந்த விதத்திலும் மாணாக்கர் மனம் புண்படுமாறு இவற்றை மேற்கொள்ளலாகாது. மேலும். பள்ளி வாழ்க்கை ஆசிரியர்களின் நன்மையைப் பொறுத்தது. "ஆசான் எவ்வழியோ, சீடன் அவ்வழி". ஆசிரியரின் நடத்தையை மாணாக்கர் குறிப்புணர்ந்து கொள் வதால் அஃது அவர்கள் நடத்தையையும் பாதிக்கின்றது. முன் கோபம், அதிகாரவெறி போன்றவை விரும்பத் தக்கவை அல்ல.

ஒவ்வாத பாடத்திட்டம்: ஒவ்வாத பாடத்திட்டத்தாலும் மாணாக்கர்களின் மனநலம் கெடும். பள்ளியின் பாடத்திட்டம் குழந்தைகளின் வாழ்க்கைப் பிரச்சினைகளையொட்டி அமையாவிடினும், அவர்களின் தற்போதைய தேவைகட்கு இணங்கியிரா விடினும், பல தீய விளைவுகள் உண்டாகும். எடுத்துக்காட்டாக பள்ளி எதிர்ப்பு, தீய நடத்தை, பள்ளியை விட்டு ஓடல், சிறு குறும்புகள் போன்றவை. அவற்றுள் சில மதி நுட்பமுடைய பல நெறிபிறழ்ந்த இளைஞர்கள் பாடத்திட்டத்தால் ஏற்பட்ட சலிப்பு மிகுதியாலும், திருடுவதால் உண்டாகும் உள்ளக்கிளர்ச்சியைத் துய்க்க விரும்பியும் அதில் ஈடுபட்டதாக ஓர் ஆராய்ச்சியின் முடிவால் அறியக்கிடக்கின்றது. தங்கள் திறமைக்கு மீறிய பாடங்களை வற்புறுத்திக் கற்பிக்கப்பெறும் மாணாக்கர்களின் நிலையும் இத்தகையதாகவே முடியும். குருவித் தலையில பனங்காயைக் கட்டுவது போன்ற செயலல்லவா இது? மாணாக்கர் முன் வைக்கப்பெறும் பாடங்களைப் பயில்வதில் அவர்கட்கு நம்பிக்கையும் ஆர்வமும் இருத்தல் வேண்டும்; தகுந்த அளவுக்கு வெற்றியும் தோல்வியும் கலந்து ஏற்பட்டால்தான் மாணாக் கர்கள் தம் எழுச்சி வெளியீட்டைப் பலன் தரும் நடத்தைக் கோலங்களாக ஒருமைப்படுத்தும் திறனைப் பெறுதல் இயலும்.

வகுப்பறையில் அளவிறந்த கட்டுப்பாடு: பல தொடக்க நிலைப் பள்ளிகளில் சில ஆசிரியர்கள் குழந்தைகளின் நடத் தையை அதிகமாகக் கட்டுப்படுத்துகின்றனர். குழந்தைகளை அவரவர் இடங்களில் அசைவற்று, செயலற்று இருக்க எதிர் பார்க்கின்றனர். பள்ளிப் பாடவேளைப்பட்டிப்படி வழக்கமாகத் தரப்பெறும் இடை வேலையும் இடை இடையே அளிக்கப்பெறும் கரும்பலகை வேலையும், துருதுருவென இருக்கும் குழந்தைகளின் இயக்கச் செயல் தேவைகளுக்குப் போதுமானதல்ல. மேலும், விளையாட அனுமதிக்கும் பொழுதும் அவர்கள் விருப்பப்படி விளையாடவிடாமல் ஆசிரியர்கள் குறுக்கிடுகின்றனர். இவற்றைப் பெற்றோரும் ஆசிரியரும் சிந்தித்தல் இன்றியமையாதது.