பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒழுக்க வளர்ச்சி

383


இவ்வாற்றல்தான் அவற்றைக் கட்டுப்படுத்தி அவை செல்லும் வழியிலிருந்து மீட்டும் புதிய நிலைமைகளைச் சமாளிக்கச் செய்கின்றது. பற்றுகளும் மனநிலைகளும் ஒரு பற்றின் கீழ் அமைந்த அவற்றின் ஒழுங்கான அமைப்புமே இந்தச் செயலாண்மையில் அடங்கிய கூறுகளாகும். எனவே, ஒழுக்கம் என்பது இயல்பாகவுள்ள மனநிலை, மீப்பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த பயின்ற போக்குகள்2.பயின்ற போக்குகள் - tendencies. ஆகும்; நம் முடைய பற்றுகளும் பழக்கங்களும் அதனுள் அடங்குகின்றன. சுருங்கக் கூறின், அறிதிறன் வழிகாட்டியாக அமைய, இயல்பான மன நிலைகள் இயற்புச் சூழ்நிலையுடனும், சமூகச் சூழ்நிலையுடனும் இடைவினை இயற்றுவதால் ஏற்படும் விளைவே ஒழுக்கம் என்பது. பற்றுகளே[1] ஒழுக்கத்தின் அடிப்படைகளாக அமைகின்றன.

பயிற்றும் ஆசிரியர் பாடத்திட்டம், பாடவேளைப் பட்டி, தேர்வுகள், நூலகங்கள், பொருட்காட்சிசாலை முதலியவற்றைக் கவனிக்க வேண்டும் என்றாலும், நவீன கல்வி முறையில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது குழந்தை களின் ஒழுக்கமேயாகும். கல்வி என்பது மாணாக்கர்களின் முழு மனிதத் தன்மையை-ஆளுமையை-மலரச் செய்வது அன்றோ? பயிற்றலின் நோக்கமும் அஃதாகத்தானே இருக்க வேண்டும்? மாணாக்கர்களிடம் இயல்பாகத் தோன்றும் மனப் போக்குகளை மானிட சமூகத்திற்கேற்றவாறு வளர்த்தலே பயிற்றலாகும். பயிற்றல் நன்முறையில் அமைந்தால் ஒழுக்கமும் நன்முறையில் அமையும்.

பற்றுகள்

இனி, ஒழுக்கத்தின் அடிப்படையாகவுள்ள பற்றுகளைச் சிறிது ஆராய்வோம்.

வாழ்க்கை அநுபவத்தில் உள்ளக் கிளர்ச்சிகள் பல பொருள் களைச் சுற்றி அமைகின்றன. பின்னர் அப்பொருளோ அல்லது அதனைப்பற்றிய எண்ணமோ எழுந்தால் இவ்வுள்ளக் கிளர்ச்சி யின் சேர்க்கை முழுமையும் தூண்டப்பெறுகின்றது. உள்ளக் கிளர்ச்சியின் சேர்க்கையையே பற்று என்று நாம் வழங்கு கின்றோம் பற்றுகள் கருத்து, மனிதர், பள்ளி போன்ற நிலையங்கள், பொருள்-இவற்றுள் ஒன்றினைச் சுற்றி அமையும். மிக இளமைக் காலத்திலேயே சிறுவன் தன் அன்னையைப்

  1. 3. பற்று -Sentiment.