பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

426

கல்வி உளவியல் கோட்பாடுகள்


கருதப்பெறுதல் வேண்டும். வெறும் சொற்பொழிவுகளால் உண்மையான தேவைகளை அறிதல் இயலாது. சரியாக மேம்பாடு காணவேண்டுமாயின் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் அதில் பங்கு கொண்டு ஆராய வேண்டும்; ஒவ்வொரு பள்ளிப் பிரச்சினைகளையும் அதில் அலசி ஆராய வேண்டும். பள்ளி ஆசிரியர்க் கழகத்தின் ஆதரவில் இந்த ஆராய்ச்சிகளை மேற் கொள்ளலாம். நம் பள்ளியின் கல்வி ஏற்பாட்டை எங்ஙனம் மேம்பாடுறச் செய்வது? தனியாள் வேற்றுமைகளை மிகத் திறமையாகச் சமாளிக்கும் வழிவகைகள் யாவை? ஒழுங்கு முறை பற்றிப் பள்ளியில் எழும் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணங்கள் யாவை? அவற்றை எப்படிக் கண்டு எங்ங்னம் நீக்குவது? மதிப்பெண்கள் வழங்கும் முறைகளையும் அறிக்கை களைத் தயாரிக்கும் முறைகளையும் எங்ங்ணம் சிறப்பாக அமைப்பது?- என்பன போன்றவை இவண் ஆராயப்பெறும் பிரச்சினைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். வட்டம், அல்லது மாவட்டங்களிலுள்ள பல பள்ளிகள் ஒன்று கூடியும் இப் பிரச் சினைகளை ஆராயலாம். அப்பொழுது ஆசிரியர்கள் பல சிறிய குழுக்களாகப் பிரிந்து பிரச்சினைகளைத் திட்டவட்டமாக ஆராய்ந்து முடிவுகாண வேண்டும். ஒவ்வொரு குழுவும் கண்ட முடிவுகளைப்பொது மேடையில் வெளியிடுதல் வேண்டும். இம் முறையில் தக்க பயிற்சியும் வாய்ப்பும் இல்லாத காரணத்தால் பெரும்பான்மையான ஆசிரியர்கள் தனித்தனி முறையில் பங்கு கொள்ளாது அனைத்தையும் குழுத்தலைவரின் முடிவிற்கே விட்டுவிடுவதுண்டு. இன்னும் சிலர் தனியாகவே எண்ணி எண்ணி வளர்ந்தவர்களாதலின், அவர்களும் குழு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பர்; தம்முடைய முடிவுகளையே வற்புறுத்தவும் செய்வர். இவை நிகழாமல் விழிப்பாக இருத்தல் வேண்டும்.

தொழிலிலிருந்து கொண்டேபெறும் பயிற்சியில்[1] ஆசிரியர்கள் சரியாகப் பயிற்சி பெறுகின்றனரா என்பதையறிய இவ்வினாக்கள் பெருந்துணைபுரியும். ஆசிரியர்கள் நட்பு முறையில் தொழில் நோக்கங்கள், திட்டங்கள், முறைகள்பற்றி ஆக்க முறை திறனாய்வுகளைப் பரிமாறிக் கொள்கின்றனரா? ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் ஒவ்வொரு ஆசிரியரும் பிற ஆசிரியர்களுடன் கலந்து துணை பெறுவதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குகின்றனரா? ஆசிரியர்கள் பிற ஆசிரியர்களால் கற்பதற்குத் துணை செய்வது மாணாக்கர்கட்கு மட்டிலும் கற்பிப்பதைவிட


  1. 23. தொழிலிலிருந்து கொண்டே பெறும் பயிற்சி.In-service training.