பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆசான்

427


மிகவும் சிக்கனமான கற்பித்தல் என்பதை உணர்கின்றனரா? குழு வேலையும் துறைபற்றிய கூட்டங்களும் ஆசிரியர்கள் கூடுவதற்கும், அங்குத் தொழில்பற்றிய கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் வாய்ப்புகளைத் தருகின்றன. முறையணையா[1] அடிப்படையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வது தொழில் துறைத் துாண்டலுக்குப் பயன்தரக் கூடிய மூலமாக அமைகின்றது. தவிர்க்க முடியாத முறையில் எழும் எண்ணற்ற பிரச்சினைகளுக்கேற்றவாறு புதிதாகப் பணியாற்றவரும் ஆசிரியர்களைப் பொருத்தப் பாடடைவதற்குத் துணை புரிவது ஒரு பெருந்தொண்டாகும்; இஃது ஆசிரியத் துறைக்குப் புதியவராக இருப்பவருக்குத் துணையாக இருப்பதுடன், அநுபவம் மிக்க ஆசிரியருக்கும் புதிய நோக்கங்களைத் தருகின்றது.

(ii) கருத்தரங்குகளும் பணிமனைமுறை ஆராய்ச்சிகளும்[2]: இவை பல பள்ளிகளின் ஆசிரியர்கள் அடிக்கடி ஒருங்கு கூடி தங்கள் தொழிலில் எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வாய்ப்பளிக்கின்றன. இம் முறைகளில் அமைக்கப் பெறும் ஆசிரியர்களின் மாநாடு ஓர் உண்மையின் அடிப்படையில்தான் கூட்டப் பெறுகின்றது. திறனாயும் சிந்தனை, கலந்தாய்தல், எதிர்காலச் செயல்களைப்பற்றி ஒழுங்கான திட்டம் வகுத்தல் ஆகியவற்றை ஊக்கும் சூழ்நிலையில் ஆசிரியர்கள் சிறந்த முறையில் கற்கின்றனர் என்பதுதான் அவ்வுண்மை. ஒவ்வொரு பாடஆசிரியர்களும் தத்தம் பாடம் பற்றிய பிரச்சினைகளையும் அவற்றின் விளக்கத்தினையும் அறிவதுடன், ஒழுங்கு முறைபற்றிய பொதுவான பிரச்சினை களை எல்லாப் பாடஆசிரியர்களும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளுகின்றனர். இந்த முறைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மக்களாட்சி முறையில் நடைபெறுவதால், எல்லோரும் நல்ல முறையில் பங்கு பெற்று நல்ல முறையில் கருத்துகளை அறிந்து கொள்ளுகின்றனர்.

மேற்கூறிய இரண்டு முறைகளிலும் கூட்டுறவை வளர்ப் பதற்குத் தற்சமயம் சில பயிற்சிக் கல்லூரிகளின் அங்கமாக அமைந்து பணியாற்றும் விரிவுப் பணித்துறை பேருதவி புரிந்து வருகின்றது என்பதை அதில் பங்குபெறும் ஆசிரியர்கள் நன்கு அறிவர்.

(iii) ஆசிரியர்க் கழகங்கள்[3]: ஆசிரியப் பணியில் அன்றாடம் எழும் பல பிரச்சினைகளை இக் கழகங்களில்


  1. 24. முறையணையா-Informal.
  2. 25. கருத்தரங்கு-Seminar.
  3. 26. பணிமனை முறை ஆராய்ச்சி-Workshops.