பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலாசிரியரைப் பற்றி...

70.வியதை எட்டிப் பிடிக்கும் இந்த நூலாசிரியர் பி. எஸ்.சி., எல் டி. வித்துவான், பி. ஏ., எம். ஏ., பிஎச். டி பட்டங்கள் ெபற்ற வர். ஒன்பதாண்டுகள் துறையூர் உயர்நிலைப் பள்ளி யின் முதல் தலைமையாசிரிய ராகவும் (1941-1950) பத்து ஆண்டுகள் கா ைர க் கு டி அழகப்பர் ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரியில் முதல் தமிழ்ப் பேரா சிரியராகவும் (1950 - 1960), ப தி ேன ழு ஆ ண் டு க ள். . திருவேங்கடவன் பல்கலைக் பிறப்பு : 7.9.1917 கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் (1960-1977) பணியாற்றி ஒய்வு பெற்றவர். பதினைந்து திங்கள் (1978 பிப்பிரவரி-1979 ஜூன்) கலைக்களஞ்சியத் தலைமைப் புதிப்பாசிரியராகப் பணியாற்றியவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் தத்துவத்தை ஆய்ந்து ஆங்கிலத்தில் ஆய்வுக் கட்டுரை எழுதி டாக்டர் (பிஎச். டி.) பட்டம் பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகள். எழுதி வெளியிட்டவர். பெரும்பாலும் இவை நூல் வடிவம் பெற்றன: பெற்றும் வருகின்றன. ஆசிரியம் (5), இலக்கியம் (ii), சமய விளக்கம் (7), திருத்தலப்பயணம் (10), திறனாய்வு (11), வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு (11), அறிவியல் (14); ஆராய்ச்சி (4) என்று 73 நூல்களின் ஆசிரியர். இவர்தம் அறிவியல் நூல்களில் இரண்டும், திருத்தலப் பயண நூல்களில் இரண்டும், சமய நூல்களில் ஒன்றும், திறன்ாய்வு நூல்களில் ஒன்றும் தமிழ்க அரசுப் பரிசுகளும், அறிவியல் நூல்களில் ஒன்று சென்னைப் பல்கலைக் கழகப் பரிசும், ஒன்று தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசும்-ஆக எட்டு நூல்கள் பரிசு பெற்றவை. இனிமை, எளிமை, தெளிவு இவர்தம் நூல்களின் தனிச் சிறப்புகளாகும்.

Wrapper Printed at Karpakam Achakam, M adras-600 002.