பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

கல்வி உளவியல் கோட்பாடுகள்


கின்றான். இதற்கிடையே கல்லூரி முதல்வர் வருகையால் அவருக்கு மரியாதை செலுத்துவான் வேண்டி எழுந்து நிற்கின்றான். இத் துரண்டல்கள் யாவும் வெவ்வேறு அளவு களில் அவனைத் தாக்கியபோதிலும் அவன் கவனம் முக்கியமாக அவன் முன்னிருக்கும் நூலிலேயே உள்ளது. அவன் இத் துரண்டல்கனையெல்லாம் உணர்ந்த போதிலும் படித்தல் என்னும் செயலிலேயே சிறப்பாக ஈடுபட்டுள்ளான். இவ்விதமாகப் பலப்பல வகைகளில் நாம் துரண்டப்பெற்றுச் செயலாற்றுவதனால் பொருத்தப்பாட்டு உறுப்புகளைப் பற்றிச் சற்று ஆராய்வது நலம் பயக்கும். இவற்றை மேலே காண்டோம்.

மேலும், குழந்தை தனித்து வாழ்வதில்லை. பிறருடன் கூடியே வாழ்கின்றது. ஆகவே, அது சமூகச் சூழ்நிலைக்கும் பொருத்தமுறல்வுேண்டும். பொருத்தப்பாட்டில் உ - ல் வளர்ச்சி, இயக்க வளர்ச்சி, உள்ளக்கிளர்ச்சி வளர்ச்சி, சமூகப் பண்பு வளர்ச்சி ஆகியவற்றைக் காண்கின்றோம். இச்செயல்களின் வகைகளையும் நன்கு அறிந்தால்தான் ஆசிரியர் முழுக் குழந்தையின் வளர்ச்சியில் துணைபுரியக் கூடும்.

நரம்பு மண்டலம்

குழந்தை என்பது உடல், உள்ளம் என்ற இரண்டின் சேர்க்கையாகும். இவை இரண்டும் நெருங்கிய தொடர்புடையவை. ஒன்று மற்றொன்றை ஆட்சி செலுத்த வல்லது. உடல் சோர்வுற்றிருக்கும்பொழுது மனம் வேலை செய்ய மறுக்கிறது. அங்ங்னமே, மனம் கவலையுற்றிருக்கும்பொழுது உடல்வேலை அலுப்பாக உள்ளது. உள்ளத்தின் எண்ணங்களும் விருப்பங் களும் உடலின் உறுப்புகளை இயக்குவிக்கின்றன.

மனத்தின் செயல்களால் இரண்டு பயன்கள் உண்டு. ஒன்று, தனியாளை ஒன்றுபடுத்துவது. மற்றொன்று, அத் தனியாளைச் சூழ்நிலைக்கேற்றவாறு பொருத்தமுறச் செய்வது. இந்த இரண்டு நோக்கங்களையும் முற்றுவிப்பது மிகச் சிக்கலாக அமைந்துள்ள நரம்பு மண்டலம். உடலின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் தொடர்பு கொள்வதற்கும் உடலின் எல்லாப் பகுதிகளும் வெளியுலகத்திலிருந்து செய்திகளை அறிவதற்கும், அச் செய்திகளுக்கேற்றவாறு செயற்படுவதற்கும் நரம்பு மண்டலம் துணை புரிகின்றது. எனவே, நம்முடைய செயல்களனைத்தும் நரம்பு மண்டலத்தின் நலத்தைப் பொறுத்துள்ளது. ஆகவே, நரம்பு மண்டலத்தைப்பற்றி நாம் அறிந்து கொள்வது இன்றியமையாதது. உளவியலாருக்கு இன்றியமை