பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

கல்வி உளவியல் கோட்பாடுகள்


என்று வழங்கப்பெறும். இக் குழம்புதான் கடினமான வெள்ளை விழியுடன் சேர்ந்து கண்மணியைத் தன்னிலையினின்றும் விழாதபடி காக்கின்றது. முன்.கணிருக்கும் கண்மணிக்கும் இடையே வட்டப்புழையோடு கூடிய தசையொன்று உள்து. இந்தப் புழையே பாவை[1] எனப்படுவது; இது கரும்புள்ளி போல் காணப்படும் இந்தப் பாவைத் தசையை விழித்திரை:[2] என்று வழங்குவர். விழித்திரையிலுள்ள புழை, ஒளியின் அளவிற் கேற்றவாறும் அண்மையிலுள்ள பொருளுக்கேற்றவாறும் சேய் மையிலுள்ள பொருளுக்கேற்றவாறும் மடக்குச் செயலால் இறுகியும் தளர்ந்தும் கட்டுப்படுத்தப்பெறுகின்றது. மிகக் குன்றந்த அளவு ஒளியில் அதன் குறுக்களவு 8 மில்லி மீட்டருக்கு விரிந்தும், மிக அதிகமான ஒளியில் 2 மில்லிமீட்டருக்குச் சுருங்கி யும் செயற்படுவதாகக் கணக்கிட்டுள்ளனர்.

கண்-திரை [3]: இதனைக் கட்புலப்படாம் என்றும் வழங்கு வர். இஃது ஒர் அங்குலத்தில் நூற்றில் ஒரு பங்கு பருமனே இருந்த போதிலும், இதில் பத்துப் புரைகள் அடங்கியுள்ளன. இது பல நரம்பணுக்களைக் கொண்ட அணைச்சவ்வால் ஆனது. இதில் பார்வைப் புலனுணர் உறுப்புகளின் முடிவுப் பகுதிகள் உள. காட்சிப் பு ல னு க் கு இன்றியமையாதனவாகவுள்ள கோல்கள்[4] கூம்புகள்[5]' என்ற இரண்டு வித உயிரணுக்கள் இச் சவ்வில் அடங்கியுள்ளன. கோல்கள் நூல் நூற்கும் கதிர்கள் போன்றவை; சிறு கோல்கள் போல் நீண்டிருத்தலின் இவற்றைக் கோல்கள் என்றனர். இவை பிம்பத்திற்கு ஒளிர்வைத் தருபவை. குமிழ்கள் பருத்துக் குறியனவாய்ப் பின்புறத்தே குவிந்து முடிந்து விளங்குகின்றன. பிம்பத்திற்கு நிறத்தைத் தருபவை இவை. இவை இரண்டும் புகுவாய்கள்’ எனப்படும் நரம்புறுப்புகள். கோல்களும் கூம்புகளும் கண்.திரையின் பின்புறம் கூடல்வாயின் மூலம் நரம்பு முடிச்சணுக்குடன் சேர்கின்றன. இவ்வணுக்களின் நரப்ப விழுதுகள் கண்ணைச் சுற்றிலும் பரவிப் பார்வை நரம்பாக மாறுகின்றது. பார்வை நரம்பின் மூலம் உள் துடிப்புகள் மூளைக்குக் கொண்டு செல்லப்


  1. 104.புழையே பாவை-Pupii.
  2. 105. விழித்திரை.Iris.
  3. 106.கண்-திரை-Retina.
  4. 107. கோல்கள்.Rods
  5. 108கூம்புகள்-Cones.