பக்கம்:கல்வி எனும் கண்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆரம்பக் கல்வி

97



நிலையில் சில் நாடுகள் மேநிலைக் கல்வியினை-பல்கலைக் கழகக் கல்வியினை-ஒரு சிலருக்கே உதவும் கல்வியினை வளர்க்கக் கோடி கோடியாக மேலும் மேலும், செலவிடுவதையும் சிந்தை செய்துள்ளனர். உலகவங்கி உதவ வந்த நிலையிலும் சில நாடுகள் ஏற்காது. எங்கோ பின்னடைந்த நிலையில் உள்ளதும் எண்ணப்பட்டது வளமான் காமன் வெல்த் நாடுகள் ஏழை நாடுகளுக்கு நிதி உதவ வேண்டிய நிலையினையும் அவர்கள் சுட்டிக் காட்டத் தவறவில்லை. காமன்வெல்த் உயர்கல்வி வளர்ச்சித் திட்டமும் (Commen Wealth Higher Education Support Scheme) ஆரம்பிக் கல்வித் திட்டமும் சேர்ந்து வளரும் நாடுகளில் கல்வி வளர்க்க வாய்ப்பளிக்கும் நிலையினையும் எண்ணியுள்ளனர்.

நம் பாரதமும் இதை எண்ண வேண்டும். ஆரம்பக்கல்வி திருந்தினால்தான் பிற அனைத்து மட்டத்து உயர்கல்விகளும் உயர்ச்சியுறும். இந்த நிலை இன்றேல் என்னாகும் என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும். ஆளும் நல்ல அமைச்சர்கள் ஆழ்ந்து எண்ணி ஆவன காண்பார்களாக.

இந்தத் தலைப்பு அச்சாகிக் கொண்டிருக்கையில் தினமணியில் (17-11-91-பக். 4) திரு. த. பரசுராமன் என்பவர் எழுதிய ‘தொடக்கப்பள்ளிகளில் தடுமாறும் தமிழ்’ என்ற கட்டுரை வெளிவந்ததைக் கண்டேன். அதில் அவர்கள் தமிழ்நாட்டில் தமிழ்மொழி போற்றப்பெறாத அவல நிலையினை நன்கு விளக்கியுள்ளனர். தொடக்க நிலையில் மொழிக்கே முக்கியத்துவம் தரவேண்டும்’ எனச் சுட்டி, மொழிப்பாடம் ஆரம்பப் பள்ளிகளில் பெற்றுள்ள இழிநிலையினைச் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் நாட்டினைத் தவிர்த்து இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வாறு தாய்மொழி-நாட்டுமொழி தாழ்த்தப்பெறும் அவலநிலை கிடையாது இதில் வேறு ‘நம்மை நாமே ஆளுகிறோம்’ என்று நாம் பெருமையாகப் பேசிக் கொள்ளுகிறோம். இனியாகிலும் தமிழ்நாட்டில் விழிப்புணர்ச்சி அரும்புமா? தமிழக அரசு தக்கன செய்யுமா? பொறுத்திருந்து காணவேண்டும்.