பக்கம்:கல்வி எனும் கண்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்கலைக் கழகங்கள்

51



தோன்றும்-உண்மையும் அதுவே. ஏதேனும் ஒன்றில் திறம் பெறின், அவன் பின், ஆசிரியனாகவோ வேறு வகையிலோ வாழ்க்கையில் புகும்போது அதில் தெளிந்த அறிவுடையவனாய்ப் பிறரை ஆற்றுப்படுத்தித் தானும் செயல்பட முடியும். மூன்று என்றால் மூன்றில் ஒன்றிலும் முழுமை பெறா நிலையில் ஒருவன் வாழ்வு எப்படிச் சிறக்கும்? அதனாலேயே பிற மாநிலங்களில் பயின்று பட்ட்ம் பெற்றவர் ஆசிரியர் பயிற்சி பெற்ற போதிலும் அவர்களைத் தமிழ் நாட்டுப் பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்க அஞ்ச வேண்டி உள்ளது. பல பள்ளிகள் நியமிப்பதும் இல்லை. இந்த நிலையில் இந்திய அரசாங்கம்-கல்வியைத் தன்னொடு கட்டிப்பிடித்துள்ள அரசாங்கம். ஒரு பொது விதியை அமைக்க வேண்டும். அப்படியே எந்த முறைக் கல்வி, இருப்பினும் பள்ளிகளில் அவை இயங்கும் மாநிலத்தின் மொழி மூன்றில் ஒன்றோ-இரண்டில் ஒன்றோ கட்டாயமாக இருக்க வேண்டும் எனவும் விதி செய்ய வேண்டும். இத்தகைய பொது விதிகள் நாட்டின் ஒருமைப்பாட்டினை வளர்ப்பதோடு மொழி அறிவினையும் கல்வித் தெளிவினையும் தரும் என்பது உறுதி.

பொதுவாக அரசாங்கக் கல்வி நிலையங்களைக் காட்டிலும் தனியார் நிலையங்கள்-ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரி வரையில்-செம்மையாகச் செயல்படுவதைக் காண்கின்றோம். அரசாங்கக் கல்லூரிகளில் போதிய ஆசிரியர்களை உரிய காலத்தில் நியமிக்கா நிலை உள்ளது. அடிக்கடி ஆசிரியர்களை மாற்றும் நிலையும் உள்ளது. இவை பெரும்பாலும் மாணவர் நலனைப் பாதிக்காது இருக்குமோ!

மாணவர்களிடம் பெருந்தொகை-எந்தப் பெயரிலே வாங்கினாலும் அதற்கேற்ற வகையில் மாணவர் தேவைகளை நிறைவுசெய்யின்-தக்க ஆசிரியர்களை நியமித்து-இடையறா வகையில் கல்வி அளித்து, செயல்முறைகளைச் செம்மைப் படுத்தி, வெறும் ஏட்டுக் கல்வியொடு நாட்டுப் பற்றும்