பக்கம்:கல்வி எனும் கண்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. மேநிலை வகுப்பு (+2)



தமிழகக் கல்வித்துறையிலே, பதினொன்று, பன்னிரண்டு ஆகிய இருவகுப்புகளடங்கிய (+2) மேநிலைக் கல்வியே சிறப்பாக அமையவேண்டியதாகும். பத்தாம் வகுப்பு வரை எல்லாரும் பெரும்பாலும் அந்தந்த ஊரிலிருந்தே படிக்க வசதிகள் பெருகிவருகின்றன. அந்த வகுப்புகளில் பெரும்பாலும் தாய்மொழி மூலமே கல்வி கற்பிக்கப்பெறுகின்றது. பெருநகரங்களில் பல பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருப்பினும் பல பள்ளிகளில் தமிழே பயிற்றுமொழியாக உள்ளது. பிள்ளைகள் தாய்மொழி வழியே எளிதில் கற்று முன்னேற வழி ஏற்படுகின்றது. மேலும் அதுவரை பயிற்று மொழி எதுவாயினும்-இலவசக் கல்வியாகவே உள்ளது. ஆயினும் அந்தப் பத்தாம் வகுப்பிலேயே நூற்றுக்கு 60 அல்லது 70க்குமேல் தேர்ச்சி பெறுவது அரிதாக உள்ளது. அதற்குக் காரணம் ஆசிரியர்கள் சிலர் திறம்ப்ட் இயங்காமையும் மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்களோடு கரும்பலகை உட்பட நல்ல கட்டடங்களோ சூழ்நிலையோ இல்லாமையுமாகும். எப்படியோ அந்தப் பத்தாம் வகுப்பினைத் தாண்டியபின், ஒருசிலர் தவிர்த்துப் பெரும்பாலோர்-பாதிக்குமேல் பதினோராம் வகுப்பில் சேர்கின்றனர். அப்படிச் சேரும்போது பெரும்பாலும் ஆங்கிலம் பயிற்றுமொழியாக அமையும் பள்ளிகளே அதிகம் உள்ளன. சில வகுப்புகளில் தமிழ் பயிற்றுமொழியாக இருப்பினும் எல்லாப் பள்ளிகளிலும் ஆங்கிலம் பயிற்றுமொழியாக உள்ளது. அத்தகைய வகுப்புகளுக்குப் பள்ளிக் கட்டணமும் உண்டு (சிறுதொகையே). அரசாங்க முறையில் மானியம்பெறும் பள்ளிகள்போக, மானியம்பெறாத மெட்ரிகுலேஷன் பள்ளி போன்றவை, மத்தியபள்ளி ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் பத்தாம்